தேமுதிக மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி: 2ம் தேதி கூட்டணியை அறிவிக்கிறார் விஜயகாந்த்
திருப்பதி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து உளுந்தூர்பேட்டை மாநாட்டில் நிச்சயம் அறிவிக்கப்படும் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தனது 25வது திருமண நாளையொட்டி, விஜயகாந்த், பிரேமலதா அவரது குடும்பத்தினருடன் திருப்பதியில் இன்று அதிகாலையில் வழிபாடு நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், உளுந்தூர்பேட்டையில் நாளை மறுநாள் நடைபெறும் ஊழல் எதிர்ப்பு மாநாட்டின் முடிவில், தொண்டர்களின் கருத்துகளை முழுமையாக அறிந்து, தேர்தல் கூட்டணி குறித்து இறுதி முடிவை வெளியிடப்படும் என்றார்.
மாநாட்டிற்கு காவல்துறையினரின் அனுமதி கிடைத்துவிட்டதாகவும் விஜயகாந்த் தெரிவித்தார்.

அடுத்த திட்டம் என்ன?
எனினும் கூட்டணி விஷயத்தில், விஜயகாந்தின் அடுத்த திட்டம் என்ன என்பது குறித்து, பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
மக்களவைத் தேர்தலில், தே.மு.தி.க.,வை தங்கள் பக்கம் இழுக்க, தி.மு.க.,வும், -பா.ஜ.கவும், தூது மேல் தூது விட்டு வருகின்றன. ஆனாலும், எதற்கும் பிடிகொடுக்காமல் விஜயகாந்த் நழுவி வருகிறார்.
உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள, எறஞ்சியில், நாளை மறுதினம் நடக்கவுள்ள, தே.மு.தி.க., மாநில மாநாட்டில், கூட்டணி தொடர்பாக, கருத்து கேட்டு, முடிவை அறிவிப்பதாக தெரிவித்து உள்ளார்.
பாஜக கூட்டணியில், தே.மு.தி.க., இடம் பெறலாம் என்ற கருத்து, பரவலாக எழுந்துள்ளது. 'தே.மு.தி.க., மாநாட்டிற்கு, 'ஊழல் எதிர்ப்பு மாநாடு' என, பெயரிடப்பட்டு உள்ளதால், தங்களுடன் விஜயகாந்த், கூட்டணி அமைப்பது உறுதி' என, பா.ஜ.க நிர்வாகிகள் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதுபற்றி, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த, 2011 சட்டசபை தேர்தலின் போது, கூட்டணி தொடர்பாக கருத்து கேட்க, சேலத்தில், தே.மு.தி.க., மாநாடு நடந்தது. அப்போது, கட்சியினரிடம் கூட்டணி பற்றி, விஜயகாந்த் கருத்து கேட்டார். தே.மு.தி.க., நிர்வாகிகளும், தொண்டர்களும், கூட்டணி அமைப்பதற்கு ஆதரவாக கையை உயர்த்தினர். இதையடுத்து, அ.தி.மு.க., உடன் கூட்டணி அமைக்க முடிவு செய்து, அறிவிப்பு வெளியிட்டார்.
ஆனால், உளுந்தூர் பேட்டை மாநாட்டில், இரு கட்சிகளின் பெயரை கூறி, அதில், எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என, விஜயகாந்த் கருத்து கேட்பார். தொண்டர்கள், கையை உயர்த்தி கருத்து தெரிவித்தாலும், மாநாட்டிலேயே விஜயகாந்த், தன் முடிவை அறிவிக்க மாட்டார். சென்னை திரும்பியதும், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே, முடிவை அறிவிப்பார். இவ்வாறு, தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications