மாயாவதி, ஜெயாபச்சன் உள்பட 58 எம்பிகள் பதவிக்காலம் முடிகிறது... மார்ச் 23ல் தேர்தல் அறிவிப்பு!
ராஜ்யசபாவில் பதவிக்காலம் முடியும் 58 இடங்களுக்கு மார்ச் 23ல் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : ராஜ்யசபாவில் பதவிக்காலம் முடியும் 58 இடங்களுக்கு மார்ச் 23ல் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
16 மாநிலங்களைச் சேர்ந்த 58 ராஜ்யசபா எம்பிகளின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அந்த இடங்களுக்கு மார்ச் 23ல் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கலுக்கு மார்ச் 12 கடைசி நாளாகும்.

ஏப்ரல் 2018 உடன் 58 எம்பிகளின் பதவிக்காலம் முடிகிறது. அதிகபட்சமாக உத்திரபிரதேச மாநிலத்தில் இருந்து 10 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
சமாஜ்வாதி கட்சியின் கிரன்மோய் நந்தா, தர்ஷன் சிங், நரேஷ் அகர்வால், ஜெயாபச்சன், பாஜகவின் வினய் கடியார், காங்கிரஸ் கட்சியின் பிரமோத் திவாரி உள்ளிட்டோர் பதவிக்காலம் முடியும் உத்திரபிரதேச மாநில எம்பிகள்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதியின் பதவிக்காலமும் 2018ம் ஆண்டுடன் முடிகிறது. மாயாவதி ஜூலை மாதமே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். தலித் பிரச்னைகள் குறித்து விவாதிக்க அனுமதிக்காததை கண்டித்து மாயாவதி தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதே போன்று பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த மேலும் 4 உறுப்பினர்களின் பதவிக்காலமும் முடிகிறது.
உத்திரபிரதேசத்திற்கு அடுத்தபடியாக பீகார், மராட்டிய மாநிலத்தில் இருந்து தலா 6 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். மேற்குவங்கம், மத்தியபிரதேசத்தில் தலா 5 பேரும், கர்நாடகா, குஜராத்தில் இருந்து தலா 4 பேரும் தேர்ந்தெடுக்கப்படுவர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications