மேற்கு வங்க ரயில் விபத்து! உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்வு! நிகழ்விடத்தில் ரயில்வே அமைச்சர் ஆய்வு!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பைகேனரில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்தி நோக்கிச் சென்ற விரைவு ரயில் மேற்கு வங்கம் மாநிலம் தோமஹானி பகுதியில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் ரயிலின் 12 பெட்டிகளும் மொத்தமாக தடம் புரண்டதால் 25-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்ததோடு 4 பேர் உயிரிழந்தனர்.

தற்போது நேரம் செல்ல செல்ல ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பலி எண்ணிக்கை 4-ல் இருந்து 9-ஆக உயர்ந்துள்ள சூழலில், விபத்து நிகழ்ந்த இடத்தை நேரில் ஆய்வு செய்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ், விபத்து பற்றி விசாரிக்க குழு அமைக்க உத்தரவிட்டார்.
மேலும், ரயில் விபத்து மீட்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடியிடம் அலைபேசி மூலம் விளக்கி வருவதாகவும் ரயில் தடம் புரண்டது தொடர்பாக தனிப்பட்ட முறையில் தீவிர கவனம் செலுத்தி நிலைமையை கண்காணித்து வருவதாகவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார். விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து நலம்பெற வாழ்த்துவதாக கூறியிருக்கிறார்.

இதனிடையே ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடும் வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 இழப்பீடு தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நிகழ்ந்த போது காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக இருந்த நிலையில், தற்போது 50-க்கும் மேல் அந்த எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications