Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெண் போலீஸ் அதிகாரியை தாக்கினாரா ஜிக்னேஷ் மேவானி... 2வது முறை கைது பற்றிய பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

கவுஹாத்தி: பிரதமர் நரேந்திர மோடியை கோட்சேவுடன் தொடர்புபடுத்தி டுவிட்டரில் பதிவிட்ட வழக்கில் கைதான குஜராத் சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானிக்கு ஜாமீன் கிடைத்த நிலையில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் போலீஸ் அதிகாரியை அவர் தாக்கினாரா என்பது பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

குஜராத் மாநிலம் வட்கம் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் ஜிக்னேஷ் மேவானி. ராஷ்ட்ரிய தலித் அதிகார் மன்ஞ் ஒருங்கிணைப்பாளராகவும் இவர் உள்ளார்.

இவர் கடந்த 2017 குஜராத் சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலின்போது இவருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு பெற்றது.

ஜிக்னேஷ் மேவானி கைது

ஜிக்னேஷ் மேவானி கைது

இந்நிலையில் கடந்த வாரம் வியாழக்கிழமை நள்ளிரவில் குஜராத் மாநிலம் பாலன்பூர் சர்க்யூட் ஹவுஸில் அவரை அசாம் போலீசார் கடந்த வாரம் வியாழக்கிழமை கைது செய்தனர். பிறகு அவர் விமானத்தில் அங்கிருந்து அசாம் மாநிலத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடியை கோட்சேவுடன் தொடர்பு படுத்தி டுவிட்டரில் பதிவிட்டது தொடர்பான புகாரில் அவர் கைது செய்யப்பட்டார்.

ஜாமீனுக்கு பின் மீண்டும் கைது

ஜாமீனுக்கு பின் மீண்டும் கைது

இந்த வழக்கில் கோக்ரஜார் நீதிமன்றம் நேற்று மாலை ஜிக்னேஷ் மேவானிக்கு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.ஆனால் இந்த விடுதலை அதிக நேரம் நீடிக்கவில்லை. மாறாக அடுத்த சில மணிநேரங்களில் ஜிக்னேஷ் மேவானியை போலீசார் மீண்டும் கைது செய்தனர். கவுஹாத்தியில் இருந்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தபோது அவர் பெண் போலீஸ் அதிகாரியை திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்து இருக்கையில் தள்ளியதாக கூறப்படும் நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீண்டும் கைது ஏன்

மீண்டும் கைது ஏன்

இதுபற்றி பார்பெட்டா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமிதவ சின்ஹா கூறுகையில், ‛‛ஏப்ரல் 21 அன்று காலை - கோக்ரஜாரை சேர்ந்த ஒரு பெண் காவல் ஆய்வாளர் பார்பேட்டா சாலை போலீசில் புகார் அளித்ததன் அடிப்படையில் ஜிக்னேஷ் மேவானி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் பார்பெட்டா சாலை போலீஸ் காவலில் உள்ளார். 24 மணிநேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்'' என்றார்.

என்னென்ன வழக்குகள்

என்னென்ன வழக்குகள்

மேலும் போலீசார் கூறுகையில், ‛‛அதாவது கவுஹாத்தி விமான நிலையத்தில் இருந்து ஜிக்னேஷ் மேவானியை போலீஸ் நிலையம் அழைத்து சென்றபோது அவர் பெண் போலீஸ் அதிகாரியை திட்டி அவரை காரின் இருக்கையில் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஏப்ரல் 21ல் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்'' என்றனர். இதுபற்றி சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி கூறுகையில், ‛‛ஜிக்னேஷ் மேவானி மீது இந்திய தண்டனை சட்டப்பிரவு 294(பொது இடத்தில் ஆபாசசெயல்), 354(பெண்ணை தாக்குதல்), 353(தாக்குதல் அல்லது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல்), 323 (காயப்படுத்துதல்)ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஜிக்னேஷ் மேவானி மறுப்பு

ஜிக்னேஷ் மேவானி மறுப்பு

மேவானியின் வழக்கறிஞரும் மூத்த வழக்கறிஞருமான அங்ஷுமன் போரா கூறுகையில், ‛‛இது முற்றிலும் பொய்யான மற்றும் ஜோடிக்கப்பட்ட வழக்கு. இதுகுறித்து போலீசார் நீதிமன்றத்தில் எதுவும் கூறவில்லை. திடீரென்று பெண் போலீஸ் அதிகாரியிடம் தவறாக நடந்ததாக குற்றம்சாட்டுகின்றனர். இது திடீரென்று எங்கிருந்து வந்தது?. இத்தகைய செயல் கொடுமையானது" என்றார். மேலும் இந்த குற்றச்சாட்டுகளை ஜிக்னேஷ் மேவானி முற்றிலுமாக மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு இந்த செயலை பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் செய்துள்ளனர்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+