உஷார் மக்களே, உஷார்!: பெங்களூர் பன்னர்கட்டா பூங்காவில் 'ஃப்ரீயாக' சுற்றும் புலி
பெங்களூர்: பெங்களூரில் உள்ள பன்னர்கட்டா உயிரியல் தேசிய பூங்காவில் புலி ஒன்று சுற்றித் திரிவது தெரிய வந்துள்ளது.
பெங்களூரில் பன்னர்கட்டா உயிரியல் தேசிய பூங்கா உள்ளது. அங்கு புலிகள், யானைகள், சிங்கங்கள் என பல வகை மிருகங்கள் தனித் தனி வேலிப் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக வேலி இல்லாத பகுதிகளில் புலியின் கால் தடம் இருப்பது தெரிய வந்தது.

பூங்கா புலிகள் அதன் வேலியை விட்டு வெளியே வராத நிலையில் கால் தடம் மட்டும் தினமும் பல்வேறு இடங்களில் பதிவது அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பூங்காவின் வனப்பகுதியில் வேன் ஓட்டும் சதீஷ் என்பவர் காட்டில் சுற்றித் திரிந்த புலியை புகைப்படம் எடுத்தார். அதன் பிறகே புலி ஒன்று வேலியில் இல்லாமல் சுற்றுவது உறுதிபடுத்தப்பட்டது.
அந்த புலி காவிரி உயிரியல் காப்பகத்தில் இருந்து வந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் புலி தமிழகத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து வந்திருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
புலியால் நகரில் வசிக்கும் பொதுமக்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ள அதிகாரிகள் அதை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications