குடியுரிமை சட்ட திருத்தம் அமலாகும்.. ஒரு இஞ்ச் கூட பின்வாங்கப் போவதில்லை.. அமித் ஷா அறிவிப்பு
Recommended Video

ஜெய்ப்பூர்: குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவதில் இருந்து ஒரு இஞ்ச் கூட பின்வாங்க போவதில்லை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரில் இன்று நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய போது, அமித் ஷா இவ்வாறு தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சி, மமதா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்டவை குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்க்கின்றன. பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.

உங்களுக்கு தைரியம் இருந்தால் என்னுடன் இது பற்றி விவாதிக்க வாருங்கள். அப்படி இல்லாவிட்டால் இத்தாலிய மொழியில் இந்த சட்டத்தை மொழியாக்கம் செய்து உங்களுக்கு தருகிறேன். அப்போது தான் உங்களால் வாசிக்க முடியும்.
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி போலியான தகவல்களையும், பொய்யான தகவல்களையும் பரப்பி வருகிறது. இந்த நாட்டின் இளைஞர்கள் தவறுதலாக தெருக்களுக்கு இழுத்து வரப்படுகிறார்கள்.
எந்த அளவுக்கு பொய் பரப்பப்பட்டாலும் சரி, மக்களிடமும் சிறுபான்மையினரிடமும் உண்மையை எடுத்துக் கூற, பாஜக தயாராக இருக்கிறது. எனவே, இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் இருந்து ஒரு இன்ச் கூட பின்வாங்கப் போவதில்லை. இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.
குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த போவதாக பாஜக அறிவித்துள்ளது. நாளை முதல் பாஜக தலைவர்கள் வீடு வீடாக சென்று சட்டம் தொடர்பான பிரச்சாரங்களில் ஈடுபட உள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications