சட்டவிரோதமாக அபார்ஷன்... அமெரிக்காவில் இந்திய பெண்ணுக்கு 30 ஆண்டுகள் சிறை
வாஷிங்டன்: சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த குற்றத்திற்காகாக இந்தியப் பெண்ணுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள இன்டியானா மாகாணத்தில் வசித்து வந்தவர் பூர்வி பட்டேல் (33). இந்திய வம்சாவளியை சேர்ந்த பூர்வி, கடந்த 2013ம் ஆண்டு கர்ப்பமாக இருந்துள்ளார். ஆனால், அக்கர்ப்பத்தை வளர்க்க விரும்பாத பூர்வி, அதனைக் கலைத்து விட முடிவு செய்தார்.
இன்டியானா மாகாணத்தில் கர்ப்பத்தை கலைப்பது சட்ட விரோதமாகும். எனவே, கருக்கலைப்பிற்கு மருத்துவமனைக்கு செல்லாத பூர்வி, ஹாங்காங்கில் இருந்து இணையதளம் மூலம் கருக்கலைப்பு மருந்துகளை ஆர்டர் செய்து வரவழைத்தார்.
பின்னர் அம்மருந்துகளை சாப்பிட்டு தனது கருவை அவர் கலைத்த பூர்வி, அந்த சிசுவை ஒரு பையில் அடைத்து குப்பை தொட்டியில் வீசி விட்டார். தகுந்த மருத்துவ ஆலோசனை பெறாது தானாகவே கருக்கலைப்பு செய்து கொண்ட பூர்விக்கு ரத்தப்போக்கு காரணமாக கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது.
இதனால் சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்ந்தார். ஆனால், அப்போதும் அவர் தான் கருக்கலைப்பு செய்த விசயத்தை மருத்துவர்களிடம் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே குப்பை தொட்டியில் வீசிய கருவை போலீசார் கண்டெடுத்தனர். அது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், பூர்வி தான் இதை செய்தார் என்பது கண்டுபிடிக்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து பூர்வி மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரைக் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் உறுதி செய்யப்பட்டதால் பூர்விக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளார்.
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications