சட்டவிரோதமாக அபார்ஷன்... அமெரிக்காவில் இந்திய பெண்ணுக்கு 30 ஆண்டுகள் சிறை
வாஷிங்டன்: சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த குற்றத்திற்காகாக இந்தியப் பெண்ணுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள இன்டியானா மாகாணத்தில் வசித்து வந்தவர் பூர்வி பட்டேல் (33). இந்திய வம்சாவளியை சேர்ந்த பூர்வி, கடந்த 2013ம் ஆண்டு கர்ப்பமாக இருந்துள்ளார். ஆனால், அக்கர்ப்பத்தை வளர்க்க விரும்பாத பூர்வி, அதனைக் கலைத்து விட முடிவு செய்தார்.
இன்டியானா மாகாணத்தில் கர்ப்பத்தை கலைப்பது சட்ட விரோதமாகும். எனவே, கருக்கலைப்பிற்கு மருத்துவமனைக்கு செல்லாத பூர்வி, ஹாங்காங்கில் இருந்து இணையதளம் மூலம் கருக்கலைப்பு மருந்துகளை ஆர்டர் செய்து வரவழைத்தார்.
பின்னர் அம்மருந்துகளை சாப்பிட்டு தனது கருவை அவர் கலைத்த பூர்வி, அந்த சிசுவை ஒரு பையில் அடைத்து குப்பை தொட்டியில் வீசி விட்டார். தகுந்த மருத்துவ ஆலோசனை பெறாது தானாகவே கருக்கலைப்பு செய்து கொண்ட பூர்விக்கு ரத்தப்போக்கு காரணமாக கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது.
இதனால் சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்ந்தார். ஆனால், அப்போதும் அவர் தான் கருக்கலைப்பு செய்த விசயத்தை மருத்துவர்களிடம் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே குப்பை தொட்டியில் வீசிய கருவை போலீசார் கண்டெடுத்தனர். அது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், பூர்வி தான் இதை செய்தார் என்பது கண்டுபிடிக்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து பூர்வி மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரைக் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் உறுதி செய்யப்பட்டதால் பூர்விக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications