வங்கதேசத்தில் இந்துக்களின் 30 வீடுகள் தீக்கிரை- ஃபேஸ்புக் பதிவு வதந்தியால் விபரீதம்
வங்கதேசத்தின் 'தாக்குர்பரா' கிராமத்தில் 30 இந்துக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
டாக்கா: வங்கதேசத்தின் தாக்குர்பரா கிராமத்தில் 30 இந்துக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
தாக்குர்பரா என்ற கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் மதங்களுக்குள் இருக்கும் வேறுபாடு குறித்து பேஸ்புக்கில் எழுதியதாக ஒரு வதந்தி பரவியது. இந்த போஸ்ட் காரணமாக அப் பகுதியில் சிறிய அளவில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.

பின் போக போக அது இரண்டு கிராமங்களுக்கு இடையிலான பிரச்சனையாக மாறியிருக்கிறது. இந்த நிலையில் இரவு 10 மணிக்கு மேல் அந்த கலவரம் மிகவும் பெரியதாக மாறியிருக்கிறது.
ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அந்த கிராமத்தை சுற்றி வளைத்து இருக்கின்றனர். யாரையும் ஊரை விட்டு வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தி இருக்கின்றனர். மேலும் அங்கு இருந்த வீடுகள் அனைத்தையும் தீக்கிரையாக்கி உள்ளனர்.
இதில் 40க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து இருக்கின்றனர். படுகாயம் அடைந்த ஒருவர் இன்று காலை மரணம் அடைந்தார்.












Click it and Unblock the Notifications