வசூல் ரோபோட் எம்பிபிஎஸ்... சீனாவில் டாக்டர் பட்டம் வாங்கிய ரோபோட்.. விரைவில் ஊசி போடும்!
சீனாவை சேர்ந்த ரோபோட் ஒன்று மருத்துவ தேர்வில் கலந்துகொண்டு டாக்டர் பட்டம் வாங்கி இருக்கிறது.
பெய்ஜிங்: சீனாவை சேர்ந்த ரோபோட் ஒன்று மருத்துவ தேர்வில் கலந்துகொண்டு டாக்டர் பட்டம் வாங்கி இருக்கிறது. இதன் மூலமாக உலகிலேயே முதல்முதலாக டாக்டர் பட்டம் வாங்கிய ரோபோட் என்ற பெருமையை அது பெற்று இருக்கிறது.
மேலும் அந்த ரோபோட் சீனாவில் இதுவரை மருத்துவ தேர்வில் மனிதர்கள் எடுத்த மதிப்பெண்ணை விட அதிக மதிப்பெண்கள் எடுத்து இருக்கிறது. இது அந்த நாட்டின் மருத்துவ துறையில் பெரிய சாதனையாகும்.
இந்த ரோபோட் இன்னும் சில காலத்துக்கு உதவியாளராக பணி புரிந்துவிட்டு பின் முழு நேர டாக்டராக பணிக்கு சேரும் என கூறப்பட்டுள்ளது.

டாக்டர் தேர்வில் பாஸ் ஆனா ரோபோட் iFlytek and Tsinghua Universit
சீன தலைநகர் பெய்ஜிங்கில் சில நாட்களுக்கு முன்பு நடந்த மருத்துவ தேர்வில் ரோபோ ஒன்று கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது. சீனா அரசாங்கத்தின் அனுமதியுடன் இந்த தேர்வில் ரோபோட் பங்கு பெற்றது. இது 'ஐ ஃப்ளை டெக்' மற்றும் 'சிங்குவா பல்கலைக்கழகம்' ஆகியவற்றால் இணைந்து உருவாக்கப்ட்டது. மருத்துவ தேர்வில் மிகவும் சிறப்பாக எழுதிய அந்த ரோபோட் எளிதாக பாஸ் செய்தது.

சாதாரணமாக நடைபெற்றது
இதையடுத்து அந்த ரோபோட் நேர்முகதேர்வுக்கு அனுமதிக்கப்பட்டது. அந்த தேர்வில் அது இண்டர்நெட் உபயோகிக்க தடை செய்யப்பட்டு இருந்தது. ஆகவே அது மனிதர்களை போலவே தான் படித்து மனதில் இருக்கும் விஷயங்களை வைத்து பதில் கூறியது. கடினமான இந்த தேர்வை அது மனிதர்கள் போலவே எதிர்கொண்டது.

ரோபோட் எடுத்த மதிப்பெண்
இந்த நிலையில் சீனாவில் மருத்துவர் ஆவாதற்காக வரையறுக்கப்பட்டிருக்கும் 360 மதிப்பெண்களை விட அதிமாக எடுத்து பாஸ் ஆனது. அந்த ரோபோட் மொத்தமாக 456 மதிப்பெண்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. சீனாவில் மருத்துவ தேர்வில் எடுக்கப்பட்ட அதிகபட்ச மார்க் இதுவாகும். இதையடுத்து அந்த ரோபோட் மருத்துவ தேர்வில் முதல் மதிப்பெண் வாங்கியதாக அறிவிக்கப்பட்டது.

டாக்டர் ரோபோட்
சீனாவின் இந்த ரோபோட் தற்போது மருத்துவ பணிகளுக்கு சேர்க்கப்பட இருக்கிறது. அதன்படி முதலில் சில காலத்திற்கு பயிற்சி மருத்துவராக இருக்கும். அதன்பின் முழுநேர மருத்துவராக மாறும். இது இப்போதே 5,30,000 மக்களுக்கு சிறிய அளவில் மருத்துவம் பார்த்து இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் சில மாதத்தில் பெரிய ஆபரேஷன்கள் செய்ய அனுமதிக்கப்படும்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications