வசூல் ரோபோட் எம்பிபிஎஸ்... சீனாவில் டாக்டர் பட்டம் வாங்கிய ரோபோட்.. விரைவில் ஊசி போடும்!
சீனாவை சேர்ந்த ரோபோட் ஒன்று மருத்துவ தேர்வில் கலந்துகொண்டு டாக்டர் பட்டம் வாங்கி இருக்கிறது.
பெய்ஜிங்: சீனாவை சேர்ந்த ரோபோட் ஒன்று மருத்துவ தேர்வில் கலந்துகொண்டு டாக்டர் பட்டம் வாங்கி இருக்கிறது. இதன் மூலமாக உலகிலேயே முதல்முதலாக டாக்டர் பட்டம் வாங்கிய ரோபோட் என்ற பெருமையை அது பெற்று இருக்கிறது.
மேலும் அந்த ரோபோட் சீனாவில் இதுவரை மருத்துவ தேர்வில் மனிதர்கள் எடுத்த மதிப்பெண்ணை விட அதிக மதிப்பெண்கள் எடுத்து இருக்கிறது. இது அந்த நாட்டின் மருத்துவ துறையில் பெரிய சாதனையாகும்.
இந்த ரோபோட் இன்னும் சில காலத்துக்கு உதவியாளராக பணி புரிந்துவிட்டு பின் முழு நேர டாக்டராக பணிக்கு சேரும் என கூறப்பட்டுள்ளது.

டாக்டர் தேர்வில் பாஸ் ஆனா ரோபோட் iFlytek and Tsinghua Universit
சீன தலைநகர் பெய்ஜிங்கில் சில நாட்களுக்கு முன்பு நடந்த மருத்துவ தேர்வில் ரோபோ ஒன்று கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது. சீனா அரசாங்கத்தின் அனுமதியுடன் இந்த தேர்வில் ரோபோட் பங்கு பெற்றது. இது 'ஐ ஃப்ளை டெக்' மற்றும் 'சிங்குவா பல்கலைக்கழகம்' ஆகியவற்றால் இணைந்து உருவாக்கப்ட்டது. மருத்துவ தேர்வில் மிகவும் சிறப்பாக எழுதிய அந்த ரோபோட் எளிதாக பாஸ் செய்தது.

சாதாரணமாக நடைபெற்றது
இதையடுத்து அந்த ரோபோட் நேர்முகதேர்வுக்கு அனுமதிக்கப்பட்டது. அந்த தேர்வில் அது இண்டர்நெட் உபயோகிக்க தடை செய்யப்பட்டு இருந்தது. ஆகவே அது மனிதர்களை போலவே தான் படித்து மனதில் இருக்கும் விஷயங்களை வைத்து பதில் கூறியது. கடினமான இந்த தேர்வை அது மனிதர்கள் போலவே எதிர்கொண்டது.

ரோபோட் எடுத்த மதிப்பெண்
இந்த நிலையில் சீனாவில் மருத்துவர் ஆவாதற்காக வரையறுக்கப்பட்டிருக்கும் 360 மதிப்பெண்களை விட அதிமாக எடுத்து பாஸ் ஆனது. அந்த ரோபோட் மொத்தமாக 456 மதிப்பெண்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. சீனாவில் மருத்துவ தேர்வில் எடுக்கப்பட்ட அதிகபட்ச மார்க் இதுவாகும். இதையடுத்து அந்த ரோபோட் மருத்துவ தேர்வில் முதல் மதிப்பெண் வாங்கியதாக அறிவிக்கப்பட்டது.

டாக்டர் ரோபோட்
சீனாவின் இந்த ரோபோட் தற்போது மருத்துவ பணிகளுக்கு சேர்க்கப்பட இருக்கிறது. அதன்படி முதலில் சில காலத்திற்கு பயிற்சி மருத்துவராக இருக்கும். அதன்பின் முழுநேர மருத்துவராக மாறும். இது இப்போதே 5,30,000 மக்களுக்கு சிறிய அளவில் மருத்துவம் பார்த்து இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் சில மாதத்தில் பெரிய ஆபரேஷன்கள் செய்ய அனுமதிக்கப்படும்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications