Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாலிபான்கள் என்னை படுகொலை செய்ய வருவார்கள்.. வெயிட்டிங்... அதிரவைக்கும் ஆப்கான் முதல் பெண் மேயர்!

Subscribe to Oneindia Tamil

காபூல்: ஆப்கானிஸ்தானின் முதல் பெண் மேயர் என்ற பெருமை பெற்ற Zarifa Ghafari - ஜரீபா கபாரி அளித்திருக்கும் பேட்டி உலகை அதிர வைத்துள்ளது. அரசியலில் ஈடுபட்டதால் தாலிபான்கள் என்னை படுகொலை செய்ய வருவார்கள்.. நானும் எனது குடும்பமும் காத்திருக்கிறோம் என கூறியிருக்கிறார் ஜரீபா கபாரி.

Recommended Video

    Afghan முதல் பெண் மேயர் Zarifa அதிர வைக்கும் பேட்டி | Oneindia Tamil

    தாலிபான்கள், ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தனர். அப்போது பெண்களுக்கான அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டன. பொதுவாக டிவி, இசை, சினிமா என அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டன.

    பெண்களைப் பொறுத்தவரை வீடுகளுக்குள் அடைபட்டுக் கிடக்க வேண்டியவர்கள் என்கிற கோட்பாட்டில் தாலிபான்கள் ஆழமான நம்பிக்கை கொண்டவர்கள். இதனால் தாலிபான்கள் ஆட்சியில் பெண்கள் மிக கொடூரமான ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டனர்.

    உலக நாடுகளும் மலாலாவும்

    உலக நாடுகளும் மலாலாவும்

    2001-ல் தாலிபான்கள் வீழ்ச்சிக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானில் படிப்படியாக பெண்களுக்கான அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டன. இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல்கள், படுகொலைகளை தாலிபான்கள் நிகழ்த்தி வந்தனர். அப்படியான ஒடுக்குமுறைகளுக்கு உலக சாட்சியாக இருப்பவர் மலாலா. தாலிபான்கள் தடையை மீறி கல்வி கற்க சென்றதால் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகி உயிர் தப்பியவர் மலாலா.

    ஆப்கானின் முதல் பெண் மேயர்

    ஆப்கானின் முதல் பெண் மேயர்

    மலாலாவைப் போல உலகம் அறியாத இன்னொரு பெண் ஆப்கானிஸ்தானிலேயே உண்டு. அவர்பெயர்தான் ஜரீபா கபாரி. அவருக்கு வயது 27. 2018-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் வார்தாக் மாகாணத்தில் மைதான் சாகர் நகரத்தின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானிலும் முதல் பெண் மேயர் என்ற பெருமைக்குரியவர் ஜரீபா. தலிபான்களின் டார்கெட்டில் ஜரீபாவும் இருந்தார். இருந்து வருகிறார்.

    தாலிபான்கள் ஹிட் லிஸ்ட்டில்..

    தாலிபான்கள் ஹிட் லிஸ்ட்டில்..

    ஜரீபாவை படுகொலை செய்ய ஏற்கனவே 3 முறை தாலிபான்கள் தாக்குதல் நடத்தினர். ஆனால் தாலிபான்கள் முயற்சிகள் தோல்வியைத்தான் தழுவின. ஜரீபாவின் தந்தையான முன்னாள் ராணுவ அதிகாரி வாசிம் கபாரியையும் கடந்த ஆண்டு சுட்டுப் படுகொலை செய்தனர் தாலிபான்கள். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் மீண்டும் தாலிபான்கள் வசமாகி உள்ளது.

    பெண் உரிமையை பாதுகாப்போம்

    பெண் உரிமையை பாதுகாப்போம்

    தாலிபான்களின் காட்டாட்சியில் பெண்கள் நிலைமை என்னவாகுமோ என ஐநா பாதுகாப்பு கவுன்சில் தொடங்கி உலக நாடுகள் அனைத்தும் பதைபதைப்புடன் இருக்கின்றன. இன்னொரு பக்கம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து பல்லாயிரக்கணக்கான பெண்கள் நாட்டை விட்டு தப்பி ஓடுவதற்காக விமான நிலையத்திலேயே முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் தாலிபான்கள் முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பெண்களுக்கான உரிமையை நாங்கள் இஸ்லாமிய சட்டங்களுக்குட்பட்ட வகையில் அனுமதிப்போம். பெண்கள் அச்சப்பட தேவை இல்லை என கூறியிருக்கின்றனர். இன்னொரு பக்கம் ஆப்கானிஸ்தான் முதல் பெண் மேயரான ஜரீபா ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அந்த பேட்டிதான் இப்போது உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

    என்னை கொல்ல வருவார்கள்.. வெயிட்டிங்

    என்னை கொல்ல வருவார்கள்.. வெயிட்டிங்

    ஜரீபா கபாரி அளித்திருக்கும் பேட்டியில் கூறப்பட்டுள்ளதாவது: தாலிபான்கள் வருவார்கள்.. என்னை படுகொலை செய்வார்கள் என்பதற்காக நான் காத்திருக்கிறேன். எங்கள் குடும்பத்துக்கு உதவுவதற்கு இப்போது யாரும் இல்லை. என் கணவர் உட்பட குடும்பத்தினருடன் இங்குதான் இருக்கிறேன். என்னால் என் குடும்பத்தினரை விட்டு சென்றுவிட முடியாது. தாலிபான்கள் எங்களைத் தேடி வந்து கொலை செய்வார்கள். அதற்காக நான் இந்த தேசத்தைவிட்டு தப்பி ஓட முடியாது. அப்படி எங்குதான் தப்பி போவது? என்கிறார். அன்று மலாலா! இன்று ஜரீபா கபாரி!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+