பெண்களை வீட்டுக்குள் வைத்து பூட்டுங்க: செசன்யா அதிபர் அறிவுரை
க்ரோஸ்னி: பெண்களை வீட்டுக்குள் வைத்து பூட்டுவதுடன் அவர்களை சமூக வலைதளங்களை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று செசன்யா அதிபர் ரம்ஜான் ஏ காதிரோவ் தெரிவித்துள்ளார்.
செசன்ய அதிபர் ரம்ஜான் ஏ காதிரோவ் அரசு மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. நிகழ்ச்சியில் காதிரோவ் கூறுகையில், பெண்களை வீட்டுக்குள் வைத்து பூட்டுங்கள். அவர்களை வெளியே செல்ல அனுமதிக்காதீர்கள். வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த பெண்களுக்கு அனுமதி அளிக்காதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

காதிரோவுக்கு நெருக்கமான மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரி முகமது தவ்தோவ் தான் 50 வயதுகளில் இருந்தும் 17 வயது கேதா கொய்லபியேவாவை கடந்த சனிக்கிழமை மணந்துள்ளார். முன்னதாக போலீஸ் அதிகாரி நசுத் குசிகோவ் அந்த பெண்ணின் பெற்றோரிடம் சென்று மே மாதம் 2ம் தேதிக்குள் உங்கள் பெண்ணை ஒப்படைக்காவிட்டால் நாங்கள் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்வோம் என்று மிரட்டியதாக செய்திகள் வெளியானது.
இந்த செய்தியை பார்த்த அதிபரோ தான் அந்த சம்பவம் குறித்து விசாரித்ததாகவும் அந்த இளம்பெண்ணும் சரி, அவரது பெற்றோரும் சரி திருமணத்திற்கு சம்மதம் அளித்ததாகவும் தெரிவித்தார். அந்த திருமண விழாவில் காதிரோவ் கலந்து கொண்டு நடனமாடியதுடன் இது தான் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய திருமணம் என்று தெரிவித்துள்ளார்.
மைனர் பெண்ணை மணந்த போலீஸ் அதிகாரியை கிண்டல் செய்து பலரும் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த காதிரோவ் பெண்களை வீட்டுக்குள் பூட்டி வைத்து அவர்களை சமூக வலைதளங்களை பயன்படுத்தவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications