உலகம் முழுவதும் கொரோனாவால் 8,431 பேர் மரணம் பிரேசில் நாட்டில் 2,127 பேர் பலி
கொரோனா தொற்றினால் உலகம் முழுவதும் ஒரே நாளில் 8,431 பேர் மரணமடைந்துள்ளனர். பிரேசில் நாட்டில் கொரோனாவால் ஒரே நாளில் 2,127 பேர் பலியாகியுள்ளனர்.
ரியோ டி ஜெனிரோ: உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் ஏராளமான உயிர்கள் பலியாகி வருகின்றன. ஒரே நாளில் 8,431 பேர் மரணமடைந்துள்ளனர். பிரேசில் நாட்டில் கொரோனாவால் ஒரே நாளில் 2,127 பேர் பலியாகியுள்ளனர். ரஷ்யா, அர்ஜென்டினா, கொலம்பியா நாடுகளில் கொரோனா மரணங்கள் அதிகரித்து வருகின்றன.
உலக அளவில் கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டு வரும் வோர்ல்டோ மீட்டர்ஸ் தரவுகளின் படி உலக அளவில் 8,431 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளனர்.

இதில் பிரேசில் நாட்டில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 2,127 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் பிரேசில் நாட்டில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 518,246 பேராக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 227 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,20,223 பேராக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் ஒரே நாளில் 991 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,99,475 பேராக அதிகரித்துள்ளது.
ரஷ்யா, அர்ஜென்டினா, கொலம்பியா நாடுகளில் கொரோனா மரணங்கள் அதிகரித்து வருகின்றன. ரஷ்யாவில் ஒரே நாளில் 669 பேர் உயிரிழந்துள்ளனர். அதன் மூலம் பலி எண்ணிக்கை 1,35,214 பேராக உயர்ந்துள்ளது. இதே போல அர்ஜென்டினாவில் 636 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு இதுவரை மொத்தம் 94,304 பேர் மரணமடைந்துள்ளனர்.
கொலம்பியா நாட்டில் 610 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் பலியானோர் எண்ணிக்கை 1,06,544 பேராக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications