”பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே விலங்குகளை கொன்ற விபரீதம்”
கோபன்ஹேகன்: டென்மார்க் நாட்டில் உள்ள விலங்கியல் பூங்காவில் நடைபெற்று வரும் வன்கொடுமைகளால் விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
அங்கு உள்ள கோபன்ஹேகன் விலங்கியல் பூங்காவில் கடந்த மாதம் 18 மாத வயதேயான ஒரு ஆரோக்கியமான ஒட்டகச் சிவிங்கியை சுட்டுக் கொன்று அதை சிங்களுக்கு இரையாகப் போட்டனர். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்த நிலையில் தற்போது ஒரு சிங்கக் குடும்பத்தையே கொலை செய்துள்ளனர். அதாவது 2 சிங்கங்களையும், அதன் இரண்டு குட்டிகளையும் கொன்று விட்டனர்.
அதுவும் பொதுமக்கள் முன்னிலையில் இந்தப் படுபாதக செயலைச் செய்துள்ளனர்.
புதிதாக ஒரு சிங்கம் வருவதால் அதற்கு இடம் ஏற்படுத்திக் கொடுப்பதற்காக இந்த முடிவை எடுத்ததாக இதற்கு பதில் கூறுகின்றனர். காரணம், புதிதாக வரும் சிங்கம், இந்த சிங்கங்களைக் கொன்று விடும் என்பதால் அதைத் தவிர்ப்பதற்காக இந்த சிங்கங்களைக் கொன்றுள்ளனர்.
கொல்லப்பட்ட நான்கு சிங்கங்களுமே வயதானவை அல்ல. அதில் இரண்டு சிங்கங்கள் மட்டுமே வயதானவை. அவையும் கூட சாகும் நிலையிலோ அல்லது மிகவும் வயதான நிலையிலேயோ இல்லை.
நான்கில் இரண்டு சிங்கங்களுக்கு 10 மாத வயதாகிறது. புதிதாக வரும் சிங்கம் இவர்களை விட வலிமையானது என்பதால் வாய்ப்பு கிடைத்தால் இந்த சிங்கங்களை கொன்று விடும் என்பதால் அதைத் தவிர்க்க தாங்களே கொன்று விட்டதாக விலங்கியல் பூங்கா அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
தற்போது,இந்நிகழ்வைப் பற்றி விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.விலங்குகளைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட இடத்திலேயே அவற்றின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதுதான் உண்மை நிலவரம்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications