இங்கிலாந்தில் நாடாளுமன்ற தேர்தல் துவங்கியது: விறுவிறு வாக்குப்பதிவு
லண்டன்: 650 இடங்களை கொண்ட இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது.
650 இடங்களை கொண்ட இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. வாக்குப்பதிவு மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். இன்று இரவு 10 மணி வரை நடக்கும் தேர்தலில் சுமார் 5 கோடி மக்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்குப்பதிவு முடிந்த உடனே வாக்கு எண்ணிக்கை துவங்க உள்ளது.
இந்த தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது. இன்று இரவே சில தொகுதிகளுக்கான முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து தொகுதிகளுக்குமான முடிவுகள் நாளை மதியம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
650 எம்.பி.க்கள் தவிர்த்து பெட்போர்ட், கோப்லாந்து, லீசெஸ்டர், மான்ஸ்பீல்டு, மிடில்ஸ்ப்ரோ மற்றும் டோர்பே ஆகிய இடங்களுக்கான மேயர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
முன்னதாக தபால் மூலம் சிலர் வாக்களித்துள்ளனர். இந்த தேர்தல் குறித்து இங்கிலாந்து ஊடகங்களில் நேரலை நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருக்கிறது. தேர்தல் கருத்துக்கணிப்புகளில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications