பேஸ்புக்கின் ஆளில்லா விமானம் வானில் பறந்து வெற்றி.. இனி தொலைதூரத்திற்கும் இணைய சேவை
பேஸ்புக் நிறுவனத்தின் அக்யூலா என்றழைக்கப்படும் ஆளில்லா விமானம் 1 மணி நேரம் 45 நிமிடங்கள் வானில் பறந்து சோதனை ஓட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது.
அரிசோனா: தொலை தூரத்திற்கும் இணைய சேவை அளிக்கும் வகையில் பேஸ்புக் நிறுவனம் ஆளில்லா விமானத்தை வானில் இயக்கி வெற்றி பெற்றுள்ளது.
'அக்யூலா' என்று அழைக்கப்படும் இந்த ஆளில்லா விமானம் அரிசோனாவில் ஒரு மணி 46 நிமிடங்கள் வானில் பறந்தது. இது பேஸ்புக் நிறுவனத்தின் வெற்றியாகக் கருதப்படுகிறது.
இந்த ஆளில்லா விமானம் 60,000 அடி உயரத்தில் பறக்க விட வேண்டும் என்பது பேஸ்புக் நிறுவனத்தின் குறிக்கோள். ஆனால் 3000 அடி உயரத்தில் மட்டுமே பறந்துள்ளது. என்றாலும் சோதனை ஓட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது அந்நிறுவனத்திற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் பரிமாற்றம்
இந்த ஆளில்லா விமானம் சூரிய ஒளி மூலம் இயங்குகிறது என்பது கூடுதல் செய்தி. இந்த விமானங்கள் பல மாதங்களுக்கு வானில் நிலை நிறுத்தப்பட்டு லேசர் மூலமாக ஒன்றோடு ஒன்று தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

முதல் சோதனை தோல்வி
அக்யூலா விமானத்தை பறக்க விட்டு சோதனை ஓட்டம் வெற்றி பெற்றது கடந்த மே மாதம் என்றாலும் பேஸ்புக் நிறுவனம் தற்போதுதான் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. 2016-ஆம் ஆண்டு ஜுன் மாதம் நடைபெற்ற முதல் சோதனை தோல்வி அடைந்ததால், இந்த விமான சோதனை ஓட்டத்தை தாமதமாக தெரிவித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

புதிய தொழில்நுட்பம்
மேலும், முதல் முறை ஏற்பட்ட தோல்வி போன்று இந்த முறை ஏற்படாமல் இருக்க பேஸ்புக் தொழில்நுட்ப குழுவினர், சிறப்பு மென்பொருள்களை பயன்படுத்தியுள்ளனர். இதனால் இரண்டாவது முறையும் தோல்வி ஏற்படாமல் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளது.

தொலைத் தூரத்திற்கு இனி இணையம்
போயிங் 737 விமானத்தின் இறக்கைகளின் நீளத்தைப் போன்று 'அக்யூலா' ஆளில்லா விமானத்தின் இறக்கையும் நீளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு உலகம் முழுவதும் இணைய சேவை அளிக்க வேண்டும் என்ற பேஸ்புக் நிறுவனத்தின் குறிக்கோள் நிறைவேறும் தருவாயில் உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications