கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உள்பட 4 இந்தியர்களுக்கு 'சிறந்த புலம்பெயர்ந்த அமெரிக்கர்' விருது
வாஷிங்டன்: கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்பட 4 இந்திய-அமெரிக்கர்களுக்கு கௌரவ விருதான சிறந்த புலம்பெயர்ந்தவர்கள், அமெரிக்காவின் பெருமை விருது வழங்கப்பட உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த கார்னகி கார்பரேஷன் ஆண்டுதோறும் ‘சிறந்த புலம்பெயர்ந்த அமெரிக்கர்' விருதை வழங்கி கௌரவித்து வருகிறது.

இந்த ஆண்டின் விருதுக்கு இந்திய - அமெரிக்கர்களான கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பிரபல செய்தி தொலைக்காட்சி சேனலான ப்பி.பி.எஸ். நியூஸ் ஹவர் தொகுப்பாளரும், மூத்த நிருபருமான ஹரி ஸ்ரீனிவாசன், அமெரிக்காஸ் மற்றும் மெக்கின்சி கம்பெனியின் தலைவரான விக்ரம் மல்ஹோத்ரா, அமெரிக்க விமர்சகர்கள் வட்ட உறுப்பினரும், விருதுபெற்ற பிரபல நூலாசிரியருமான பாரதி முகர்ஜி ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
இவர்களை தவிர பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஷாய்ஸா ரிஸாவி உள்பட மொத்தம் 30 நாடுகளை சேர்ந்த 42 பேர் ‘சிறந்த புலம்பெயர்ந்த அமெரிக்கர்' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள ‘கார்னிஜி கார்ப்பரேஷன்' நிறுவனத்தின் செய்திக்குறிப்பில், ‘இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள (புலம்பெயர்ந்த) அமெரிக்கர்கள் அனைவரும் இந்த நாட்டை உருவாக்கிய நமது மூதாதையர்களைப் போன்ற சிறப்புக்குரியவர்கள் ஆவார்கள்.
பொருளாதார வாய்ப்பு, கல்வி, அரசியல் மற்றும் மதரீதியான அடைக்கலம், பாதுகாப்பு, தங்களது குடும்பம் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து வாழ்வது ஆகிய நோக்கங்களுக்காக அமெரிக்காவை தேடிவந்த இவர்கள் அனைவரும் இதர அமெரிக்க மக்களைப்போல் இந்நாட்டின் பொது நம்பிக்கையை சார்ந்து வாழ்ந்து வருகின்றனர்' என குறிப்பிடப்பட்டுள்ளது. நியூயார்க் நகரில் ஜூன் 30-ம் தேதி இந்த விருதுகள் வழங்கும் விழா நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications