ஏ.ஆர்.ரஹ்மானின் தமிழ்க் கச்சேரி.. டென்ஷனாகி பாதியில் கிளம்பிய வட இந்தியர்கள்.. லண்டனில் கலகல!
லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏஆர் ரஹ்மான் தமிழ் பாடல்களை பாடியதால் வட இந்தியர்கள் நிகழ்ச்சியை புறக்கணித்து பாதியிலேயே வெளியேறினர்.
வெம்ப்ளே: லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏஆர் ரஹ்மான் தமிழ் பாடல்களை பாடியதால் வட இந்தியர்கள் நிகழ்ச்சியை புறக்கணித்து பாதியிலேயே வெளியேறினர். மேலும் சமூக வலைதளங்களிலும் ஏஆர் ரஹ்மான் தமிழில் பாடியதாகவும் பேசியதாகவும் கொந்தளித்துள்ளனர்.
தமிழகத்தின் தலைச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏஆர் ரஹ்மான். தமிழகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் இந்தி உட்பட பல மொழிகளிலும் இசையமைத்து வருகிறார்.
ஏராளமான இசை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். தேசிய விருது முதல் ஆஸ்கர் விருது வரை அனைத்து விருதுகளையும் குவித்துள்ளார்.

நேற்று இன்று நாளை
இந்நிலையில் ஏஆர் ரஹ்மான் லண்டனின் வெம்ப்ளி ஸ்டேடியத்தில் கடந்த 8ஆம் தேதி இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். நேற்று இன்று நாளை என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

அதிக தமிழ் பாடல்கள்
தமிழ் தலைப்பில் தமிழர்களுக்காக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் ஏஆர் ரஹ்மான் தமிழிலேயே பேசினார். நிகழ்ச்சியிலும் தமிழ் பாடல்களே பாடப்பட்டன.

புறக்கணித்த வடஇந்தியர்கள்
இதனால் வெறுப்படைந்த இந்திவாலாக்கள் நிகழ்ச்சியை பாதியிலேயே புறக்கணித்து வெளியேறினர். மேலும் அவர்கள் இதுகுறித்து கொந்தளித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

குருட்டாம் போக்கில்..
அழகு தமிழில் நேற்று இன்று நாளை என தலைப்பிலேயே கூறியுள்ள நிலையில் அதனை கேட்டு தெரிந்து கொள்ளாமல் குருட்டான் போக்கில் வந்து உட்கார்ந்தது யார்? தமிழ் தெரியாத வட இந்தியர்கள் அதனை ஸ்பேனிஷ் என நினைத்தனரோ என்னவோ புரியாமல் நிகழ்ச்சிக்கு வந்தது யார்?

எங்களுக்கும் இப்படி தானே..
தமிழ்நாட்டைச் சேர்ந்த இசையமைப்பாளர் தமிழர்களுக்காக நடத்தும் நிகழ்ச்சியில் தமிழில் பாடாமல் ஃபிரெஞ்சு மொழியிலா பாடுவார்? பொழுது போக்கு நிகழ்ச்சியிலேயே வேறு மொழியை புரிந்து கொள்ள முடியாமல் புறக்கணித்த வட இந்தியர்களே, தமிழ்நாட்டில் அனைத்திலும் இந்தியை திணிக்கும் போது எங்களுக்கும் இப்படி தானே இருந்திருக்கும்?
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications