ஒரே ஒரு போன்.. சத்தமேயில்லை.. குட்டிக்குரங்கின் சேட்டையால் பதறிப் போன போலீசார்!
குரங்கு ஒன்று போலீசாருக்கு போன் செய்த வேடிக்கையான சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
கலிபோர்னியா: மர்ம அழைப்புகள் வருவது போலீசுக்கு ஒன்றும் புதிதில்லை. ஆனால், உயிரியல் பூங்காவில் இருந்து வந்த மௌனமான செல்போன் அழைப்பால், பதறிப் போய் போலீசார் விசாரணை நடத்திய வேடிக்கையான சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. விசாரணையின் முடிவில் போலீசுக்கு கால் செய்தவர் யார் என்பது தெரிய வந்ததுதான் வேடிக்கையின் ஹைலைட்டே.
செல்போன் மோகம் என்பது மனிதர்களுக்கு மட்டுமில்லை.. ஐந்தறிவு விலங்குகளுக்கும்கூட உண்டு என்பது அவ்வப்போது நடைபெறும் வேடிக்கையான சம்பவங்கள் மூலம் உறுதியாகிறது. அதிலும் நம் மூதாதையரான குரங்குகள், செல்போன் பயன்படுத்துவதில் நமக்கு சற்றும் சளைத்தவர்களில்லை. லாவகமாக செல்போனைக் கையில் பிடிப்பது, யூடியூப்பில் வீடியோ பார்ப்பது, புகைப்படம் எடுப்பது என இது போன்ற செய்திகள் நிறைய நாம் பார்த்திருப்போம்.
இப்போது அவற்றில் ஒரு படி முன்னேறி, மற்றவர்களுக்கு போன் செய்யவும் குரங்குகள் கற்றுக் கொண்டுவிட்டன என்பதை நிரூபிப்பது மாதிரி அமெரிக்காவில் ஒரு வேடிக்கையான சம்பவம் அரங்கேறியுள்ளது.

போலீஸ் குழப்பம்
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ளது ஜூ டூ யூ (Zoo to You) எனும் உயிரியல் பூங்கா. இந்தப் பூங்காவில் இருந்து கடந்த சனிக்கிழமையன்று போலீசாருக்கு அவசர அழைப்பு ஒன்று சென்றுள்ளது. ஆனால் எதிர்முனையில் இருந்து யாரும் பேசாததால், போலீசார் குழப்பமடைந்தனர்.

விசாரணை
ஒருவேளை பேச முடியாத அளவு அபாயத்தில் இருந்து யாரேனும் போன் செய்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. எனவே சம்பந்தப்பட்ட இடத்திற்கு உடனடியாக நேரில் சென்று விசாரணை மேற்கொள்வது என அவர்கள் முடிவெடுத்தனர். ஆனால் அந்தப் பூங்காவில் போலீசார் நினைத்தது போல் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை.

யார் அந்த நபர்?
எனவே, மேலும் குழப்பமடைந்த போலீசார், அப்படியென்றால் தங்களுக்கு போன் செய்தது யார் என விசாரணையை ஆரம்பித்தனர். அதில் பூங்காவை வலம்வரப் பயன்படுத்தப்படும் கோல்ஃப் வண்டியில் இருந்த செல்போனில் இருந்துதான் தங்களுக்கு அழைப்பு வந்துள்ளது என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.

குரங்கு சேட்டை
ஆனால் செல்போனுக்கு சொந்தக்காரர் போலீசை அழைக்கவில்லை. அப்படியென்றால், தங்களுக்கு போன் செய்தது யார் என போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தினர். அப்போதுதான் அங்கிருந்த ரூட் என்ற பேர் கொண்ட குரங்கு ஒன்று, அந்த செல்போனை எடுத்துப் போலீசாருக்கு போன் செய்தது தெரியவந்தது. இது போலீசாரை மட்டுமல்ல.. அங்கிருந்த மற்ற ஊழியர்களையும் அதிர்ச்சி அடையச் செய்தது.

செல்போனில் பேச ஆசை
மற்றவர்கள் செல்போனில் பேசுவதைப் பார்த்து, அதுவும் அதே மாதிரி பேச ஆசைப்பட்டிருக்கும் போல.. ஏதேதோ எண்களை அது அமுக்கி கால் செய்யப்போக, அது போலீசாருக்கு சென்று விட்டது. பேஸ்புக்கில் இந்த சம்பவத்தை பதிவாக வெளியிட்டுள்ளார் போலீஸ் அதிகாரி ஒருவர். கூடவே ரூட் குரங்கின் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்தக் குட்டிக் குரங்கா இப்படி ஒரு சேட்டையைச் செய்தது என்பது போல் அப்பாவியாக அந்தப் புகைப்படத்தில் காணப்படுகிறது ரூட்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications