சீன போலீசின் சிறந்த புலனாய்வு.. வீட்டில் இறந்த கொசுவின் டிஎன்ஏ மூலம் திருடன் அதிரடி கைது! எப்படி?
பெய்ஜிங்: சீனாவில் ஒரு வீட்டில் திருடிய திருடனை இறந்த கொசுவின் ரத்தம் மூலம் புலனாய்வு செய்து போலீசார் கைது செய்த சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது.
ஒவ்வொரு குற்ற சம்பவங்களின்போது குற்றத்தில் ஈடுபட்ட நபர் ஏதாவது ஒரு தடயத்தை விட்டு செல்வார் என்பது போலீசாரின் நம்பிக்கையாகும். எவ்வளவு தான் சிறப்பாக சிந்தித்து குற்றங்களில் ஈடுபட்டாலும் கூட போலீசார் திறமையாக தடயங்களை சேகரித்து குற்றவாளிகளை கைது செய்த பல சம்பவங்கள் நடந்துள்ளன.
அந்த வகையில் தற்போது சீனாவில் திருட்டில் ஈடுபட்ட நபரை விசித்திரமான முறையில் புலனாய்வு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். அதுதொடர்பான விபரம் வருமாறு:

அடுக்குமாடி குடியிருப்பில் திருட்டு
சீனாவின் புஜியான் மகாணத்தில் புஜோ என்ற இடம் உள்ளது. இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பூட்டியிருந்த வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர் ஒருவர் விலை மதிப்புமிக்க சில பொருட்களை திருடி சென்றார். இதுபற்றி போலீசாருக்கு போன் மூலம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வேகமாக சென்று திருட்டு நடந்ததாக கூறப்படும் வீட்டுக்கு சென்றனர்.

சமைத்து சாப்பிட்ட திருடன்
அப்போது வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. அதோடு வீட்டு பால்கனி வழியாக வீட்டுக்குள் நுழைந்த திருடன் கைவரிசை காட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசாரும் பால்கனி வழியே வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் திருட்டு நடந்திருந்தது தெரியவந்தது. மேலும் வீட்டு சமையலறையில் நூடுல்ஸ் மற்றும் முட்டை ஓடுகள் இருந்தது தெரியவந்தது. அதாவது திருட வந்த நபர் கைவரிசை காட்டிவிட்டு நூடுல்ஸ் மற்றும் முட்டை சமைத்து சாப்பிட்டது தெரியவந்தது.

கொசுவை கொன்ற திருடன்
மேலும் இரவை அந்த வீட்டில் கழித்த திருடன் கொசுக்கடியில் இருந்து தப்பிக்க கொசுவர்த்தி சுருள் பயன்படுத்திய அடையாளங்களும் இருந்தன. மேலும் சுவற்றில் கொசுவின் ரத்தக்கறை படிந்து இருந்தது. அதன் அருகே 2 கொசுக்கள் இறந்து கிடந்தன. திருடிய களைப்பில் கண்அயர்ந்த திருடனை கொசுக்கள் கடித்ததால் அதனை அவர் அடித்து கொன்றது தெரியவந்தது. இதனால் திருடனின் ரத்தம் கொசுவின் உடலில் இருக்கலாம் என போலீசார் நினைத்தனர்.

டிஎன்ஏ சோதனை
இதையடுத்து கொசு நசுக்கப்பட்டு இருந்த சுவற்றில் படிந்திருந்த ரத்தக்கறையை தடயமாக கொண்டு திருடனை பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி சுவற்றில் இருந்த ரத்த மாதிரியை சேகரித்து போலீசார் டிஎன்ஏ ஆய்வுக்கு அனுப்பினர். இந்த ஆய்வில் கிடைத்த டிஎன்ஏ முடிவை அந்த பகுதியில் குற்றபின்னணி கொண்ட திருடர்களின் டிஎன்ஏ விபரங்களுடன் போலீசார் ஒப்பிட்டு பார்த்தனர்.

திருடனை தட்டித்தூக்கிய போலீஸ்
அப்போது குற்ற பின்னணி கொண்ட சாய் என்ற பெயர் கொண்ட நபரின் ரத்தத்தின் டிஎன்ஏவும், திருட்டு நடந்த வீட்டில் இருந்த ரத்தக்கறையின் டிஎன்ஏவும் பொருந்தி போனது. இதையடுத்து சாய் தான் வீட்டில் நுழைந்து திருடியதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மூன்று இடங்களில் திருட்டில் ஈடுபட்டு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications