டெல்லியில் சார்க் பேரிடர் மேலாண்மை மையம்... இந்தியா- பாக். ஒப்புதல்!
காத்மாண்டு: டெல்லியில் புதிய சார்க் பேரிடர் மேலாண்மை மையம் தொடங்க இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன.
தெற்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர்களின் 37 ஆவது மாநாடு நேபாளத்தில் நடைபெற்று வந்தது. இதில் இந்தியாவின் சார்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம்,இலங்கை உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

சார்க் கூட்டத்தில் பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல், பேரிடர் நிர்வாகம் உட்பட பல விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது சார்க் மண்டலத்தில் சுற்றுச்சூழல் மற்றும் பேரிடர் நிர்வாகம் மையத்தை தங்கள் நாட்டில் அமைக்க இந்தியா, பாகிஸ்தான், பூடான், வங்கதேசம் ஆகிய நாடுகள் விருப்பம் தெரிவித்தன. பின் பூடான், வங்கதேசம் விலகிக் கொண்டது. இறுதியில் இந்தியாவும், பாகிஸ்தானும் அதற்கான போட்டியில் இருந்தன.
இந்நிலையில், புதிய பேரிடர் மேலாண்மை மையத்தை இந்தியாவில் நிறுவ சார்க் அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள மையத்தின் விரிவாக்கமாக இந்தியாவில் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த சார்க் மாநாடு இந்த ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள நிலையில் சார்க் அமைப்பின் தலைமை இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
சார்க் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு பின்னர் இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்தித்து இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை செய்தனர். இந்த சந்திப்பின் போது ஏற்பட்ட உடன்பாடே புதிய மையம் டெல்லியில் அமைய காரணம் என்று கருதப்படுகிறது.
முன்னதாக மாநாட்டில் பேசிய சுஷ்மா சுவராஜ் புதிய இயற்கை பேரிடர் மேலாண்மை மையம் இந்தியாவில் அமைய அனைத்து நாடுகளும் ஆதரவு தரும் என்று நம்பிக்கை தெரிவித்தார். சார்க் மாநாடு கூட்டங்கள் மிகவும் கூட்டுறவு சூழல் மிக்கதாக அமைந்ததாக சுஷ்மா சுவராஜ் மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications