டெல்லியில் சார்க் பேரிடர் மேலாண்மை மையம்... இந்தியா- பாக். ஒப்புதல்!
காத்மாண்டு: டெல்லியில் புதிய சார்க் பேரிடர் மேலாண்மை மையம் தொடங்க இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன.
தெற்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர்களின் 37 ஆவது மாநாடு நேபாளத்தில் நடைபெற்று வந்தது. இதில் இந்தியாவின் சார்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம்,இலங்கை உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

சார்க் கூட்டத்தில் பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல், பேரிடர் நிர்வாகம் உட்பட பல விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது சார்க் மண்டலத்தில் சுற்றுச்சூழல் மற்றும் பேரிடர் நிர்வாகம் மையத்தை தங்கள் நாட்டில் அமைக்க இந்தியா, பாகிஸ்தான், பூடான், வங்கதேசம் ஆகிய நாடுகள் விருப்பம் தெரிவித்தன. பின் பூடான், வங்கதேசம் விலகிக் கொண்டது. இறுதியில் இந்தியாவும், பாகிஸ்தானும் அதற்கான போட்டியில் இருந்தன.
இந்நிலையில், புதிய பேரிடர் மேலாண்மை மையத்தை இந்தியாவில் நிறுவ சார்க் அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள மையத்தின் விரிவாக்கமாக இந்தியாவில் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த சார்க் மாநாடு இந்த ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள நிலையில் சார்க் அமைப்பின் தலைமை இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
சார்க் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு பின்னர் இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்தித்து இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை செய்தனர். இந்த சந்திப்பின் போது ஏற்பட்ட உடன்பாடே புதிய மையம் டெல்லியில் அமைய காரணம் என்று கருதப்படுகிறது.
முன்னதாக மாநாட்டில் பேசிய சுஷ்மா சுவராஜ் புதிய இயற்கை பேரிடர் மேலாண்மை மையம் இந்தியாவில் அமைய அனைத்து நாடுகளும் ஆதரவு தரும் என்று நம்பிக்கை தெரிவித்தார். சார்க் மாநாடு கூட்டங்கள் மிகவும் கூட்டுறவு சூழல் மிக்கதாக அமைந்ததாக சுஷ்மா சுவராஜ் மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்.
-
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
பாகிஸ்தான் இருக்க வேண்டிய இடம் இதுதான்.. முகத்தில் அறைந்த அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications