காந்தி, புத்தர் பிறந்த மண்ணில் சகிப்புத்தன்மையற்ற சம்பவங்களை அனுமதிக்க மாட்டோம்: மோடி
லண்டன்: இந்தியாவில் நடைபெறும் ‘‘சகிப்பற்றதன்மையை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளமாட்டோம்'' என்று லண்டனில் செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து, துருக்கி ஆகிய இரு நாடுகளில் 5 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பயணத்தின் முதல்கட்டமாக அவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு நேற்று புறப்பட்டு சென்றார்.
லண்டன் சென்றடைந்த அவரை ஹீத்ரோ விமான நிலையத்தில் இங்கிலாந்து அமைச்சர்கள் யூகோ சுவைர், பிரீத்தி பட்டேல், இங்கிலாந்துக்கான இந்திய தூதர் ரஞ்சன் மத்தாய், இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் ஜேம்ஸ் பேவன் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் பிரதமர் டேவிட் கேமரூனை சந்திப்பதற்காக இங்கிலாந்து நாட்டு அரசின் தலைமைச்செயலகம் சென்றார். அதன் அருகே மன்னர் சார்லஸ் வீதியில் அமைந்துள்ள ‘டிரசரி குவாட்ரங்கிள்' என்ற இடத்தில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து இரு தலைவர்களும் பிரதமர் அலுவலகத்தில் தூதுக்குழுவினருடன் 90 நிமிடங்கள் சந்தித்து பேசினர். பேச்சுவார்த்தையின் போது, இந்தியா-இங்கிலாந்து இடையே சிவில் அணுசக்தி ஒப்பந்தம், ராணுவம், கம்ப்யூட்டர் குற்றங்கள் தடுப்பு ஒத்துழைப்பு போன்றவை தொடர்பாக ரூ.90 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
இந்த சந்திப்பை தொடர்ந்து பிரதமர் மோடியும், கேமரூனும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.
பேட்டியின் பிரதமர் மோடி கூறியதாவது:
இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. இந்தியாவில் மனித உரிமைகளை மீறும் வகையில் நடைபெறும் சம்பவங்களை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது. சகிப்பற்றத்தன்மையுடன் நடைபெறும் சம்பவங்களை ஒருபோதும் ஏற்க முடியாது. அது ஓரிரு சம்பவங்களாக இருந்தாலும் கூட பொறுத்துக்கொள்ள முடியாது. ஒவ்வொரு சம்பவத்தையும் அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ளும்.
இந்தியாவில் ஜனநாயகம் வலுவாக உள்ளது. அனைத்து தரப்பு மக்களின் உயிருக்கும், கருத்துகளுக்கும் அரசியல்சட்டம் பாதுகாப்பு அளிக்கிறது. சகிப்பின்மையுடன் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக சட்டம் கடுமையான நடவடிக்கையை எடுத்து இருக்கிறது. இந்த நடவடிக்கைகள் தொடரும். இந்தியா, காந்தியும், புத்தரும் பிறந்த மண். அங்கு அஹிம்சையும், சகிப்புத்தன்மையுமே ஆதாரம்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
-
தமிழகத்தில் 3 முறை பிரச்சாரம்.. அதிமுக பேரே வாயில் வரலை! எடப்பாடிக்கு மோடியின் அரசியல் சிக்னல் என்ன? -
வளைகுடா நாடுகளில் வாடி வதங்கும் தமிழர்கள்.. உடனடியாக மீட்க பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications