நீங்க மட்டுமல்ல, நாங்களும் பழைய மாதிரியெல்லாம் கிடையாது.. இந்தியாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை
பீஜிங்: இந்தியா மட்டுமல்ல, சீனாவும் 1962ம் ஆண்டு இருந்ததைவிட இப்போது வேறு மாதிரி நாடாகத்தான் உள்ளது என்று மிரட்டியுள்ளார் சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர்.
சிக்கிம் மாநிலத்தில், இந்திய-சீன எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளுமே, எதிர்நாட்டு ராணுவம் அத்துமீறியதாக புகார் கூறி வருகிறது. இந்த நிலையில், 1962ம் ஆண்டு போரின்போது, சீனா இந்தியாவை வெற்றிகண்டதை சுட்டிக்காட்டி எச்சரித்தது சீனா.
இதற்கு பதிலளித்த, இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் அருண் ஜேட்லி, 1962ம் ஆண்டில் இருந்த இந்தியா இதுவல்ல என்று பதிலடி தெரிவித்திருநதார்.

சீனா பதில்
ஜேட்லியின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஜெங் சுவாங் இன்று கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், இந்தியா 1962ல் இருந்ததை போல 2017ல் இல்லை என ஜேட்லி கூறியுள்ளது உண்மைதான். ஆனால் இந்தியாவை போல சீனாவும் மாறியுள்ளது.

ஒப்பந்தம்
1890ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தை இந்தியா மதித்து நடக்க வேண்டும். எல்லையில் இருந்து தனது ராணுவத்தை இந்தியா திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

எச்சரிக்கை
சீனா தனது எல்லைகளை காத்துக்கொள்ளவும், தனது மதிப்பை நிலைநிறுத்திக்கொள்ளவும் அனைத்து வகை நடவடிக்கைகளையும் எடுக்கும். இவ்வாறு ஜெங் சுவாங் எச்சரிக்கை தொனியில் தெரிவித்துள்ளார்.

நட்புக்கு தயார்
இந்தியாவுடனும், பூட்டானுடனும் சீனா நல்ல உறவை பராமரிக்கவே விரும்புகிறது. பூட்டானை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு சீன எல்லைக்குள் இந்திய ராணுவம் நுழைவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு ஜெங் சுவாங் தெரிவித்தார்.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications