வடகொரியாவின் ஏவுகணை தாக்குதல் - ஜப்பான் பிரதமர் அபே கண்டனம் - மக்களுக்கு அரசு எச்சரிக்கை
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஜப்பான் அரசு எச்சரித்துள்ளது.
சியோல்: ஐக்கிய நாடுகளின் கடும் எச்சரிக்கையும் மீறி ஜப்பானை நோக்கி வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஜப்பான் அரசு எச்சரித்துள்ளது.
வடகொரியா தொடர்ந்து அணு குண்டு சோதனை, ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. தென்கொரியா அமெரிக்கா மற்றும் ஐ.நா.சபையும் கடும் எச்சரிக்கை மற்றும் பொருளாதார தடை விதித்தும் கண்டு கொள்ளவில்லை.

வட கொரியா மீது ஐக்கிய நாடுகள் சபை கடுமையான பொருளாதார தடை விதித்துள்ளது. எனினும், வட கொரியா, தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தது. அந்த ஏவுகணை வடகொரியாவின் தலைநகரான பியாங்யாங்கிலிருந்து கிழக்கு நோக்கி ஜப்பான் வான் எல்லை வழியே பாய்ந்து சென்று பசுபிக் கடலில் விழுந்தது.
அந்த ஏவுகணை 770 கிலோமீட்டர் உயரத்தில், 3,700 கிலோமீட்டர் தூரம் பயணித்து கடலில் விழுந்ததாக தென் கொரியா குற்றம் சாட்டியுள்ளது.
வடகொரியாவின் இந்த் அத்துமீறலால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஜப்பான் அரசு எச்சரித்துள்ளது.
ஜப்பானை நோக்கி வடகொரியா ஏவுகணையை வீசியதற்கு ஜப்பான் பிரதமர் அபே கண்டனம் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவின் அத்துமீறிய நடவடிக்கைகளை ஜப்பான் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என கூறியுள்ளார். எதிர்வினைகளை ஏற்படுத்தும் வடகொரியா நடந்து கொள்வதாக பிரதமர் அபே தெரிவித்துள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications