நேபாள வங்கிகளில் முடங்கிய 3.5 கோடி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள்
நேபாள வங்கிகளில் 3.5 கோடி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் முடக்கப்பட்டுள்ளன.
காத்மண்டு: இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின்னர் நேபாள வங்கிகளில் உள்ள 3.5 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது.
கடந்த 8ம் தேதி திடீரென 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து, இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் 3.5 கோடி ரூபாய் 500 மற்றும் 1000 கோடி ரூபாய் பழைய நோட்டுக்களை நேபாள வங்கிகள் முடக்கியுள்ளது.

இதுகுறித்து, நேபாள ராஷ்டிர வங்கியின் செய்தித் தொடர்பாளர் நாராயண் பௌடெல் கூறியிருப்பதாவது:
நேபாளத்தில் உரிமம் பெற்ற வங்கிகளிடம் முடக்கப்பட்ட இந்திய ரூபாய் நோட்டுக்களின் மதிப்பு ரூ.3.5 கோடி என்று தெரிய வந்துள்ளது. இன்னும் ஒரு சில நிதி நிறுவனங்களில் உள்ள முடக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தின் மதிப்பும் தெரிய வந்தால், அது 4 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்தியாவுக்குள் வணிகத்தில் ஈடுபடும் வியாபாரிகளும், எல்லையோரம் வசிக்கும் மக்களும், இந்தியாவில் பணியாற்றும் நேபாள மக்களிடமும் இந்திய ரூபாய் நோட்டுக்கள் இருக்கும் என்று நேபாள மத்திய வங்கி கருதுகிறது.
பொதுமக்களிடம் எந்த அளவுக்கு இந்திய ரூபாய் நோட்டுக்கள் இருக்கும் என்பது குறித்து சரியான கணக்கு இல்லை என்றும் பௌடல் கூறியுள்ளார்.
முடக்கப்பட்ட இந்திய நோட்டுக்களை மாற்றி கொடுப்பது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியிடம் நோபாள அரசு கடிதம் எழுதியுள்ளது. அதற்கு முறையாக பழைய நோட்டுக்களை மாற்றுவது தொடர்பாக உரிய வகையில் இந்தியா முடிவெடுத்து அறிவிக்கும் என்று இந்திய அரசு தரப்பில் நேபாளத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications