கேரள கோவில் தீ விபத்து: பலியானவர்களின் குடும்பங்களுக்கு பாகிஸ்தான் இரங்கல்
இஸ்லாமாபாத்: கேரள கோவில் தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது பாகிஸ்தான் அரசு.
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பரவூர் புட்டிங்கல் தேவி கோவில் திருவிழாவில், வானவேடிக்கையின் போது ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் அதிகமான பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த 200க்கும் அதிகமானவர்கள் திருவனந்தபுரம், கொல்லம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை மோசமாக இருப்பதால், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட டெல்லியில் இருந்து கேரளா விரைந்துள்ளார் பிரதமர் மோடி. அதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிதியுதவியாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், கேரளாவில் நடந்த இந்த துயர சம்பவத்திற்கு பாகிஸ்தான் அரசு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘கேரள கோவிலில் நடந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications