ஆபத்தான நாடு என்பதா?.. ஜோ பைடனின் கருத்துக்கு எதிராக பொங்கி எழுந்த பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்று என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறிய நிலையில், பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பையே பாகிஸ்தான் விரும்புகிறது என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் ஆளும் கட்சியின் பிரசார கூட்டம் நடந்தது. இதில் அந்நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் கலந்துகொண்டார்.

ஜோ பைடன் உரை
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- உலகம் மிக வேகமாக மாறி வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு, உலகை வழிநடத்தி செல்லும் ஆற்றல் அமெரிக்காவுக்கு இருக்கிறது. இது கட்டுப்பாட்டுக்கு அப்பால் உள்ளது. தனி நபரினாலோ அல்லது ஒரு குறிப்பிட்ட நாட்டினாலோ அல்ல என்று கூறினார். பாகிஸ்தானின் அணு ஆயுதங்களின் பாதுகாப்பு குறித்து மேற்கத்திய நாடுகள் கவலை தெரிவித்துவரும் நிலையில் அது குறித்தும் ஜோ பைடன் பேசினார்.

பாகிஸ்தான் பிரதமர் மறுப்பு
அப்போது ஜோ பைடன், 'உலகின் மிக ஆபத்தான நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் இருக்கலாம்.. அந்நாட்டில் அணு ஆயுதங்களில் எந்த ஒரு ஒற்றுமையும் இல்லாத நிலை நிலவி வருகிறது' என்றார். மிகவும் ஆபத்தான நாடுகளில் பாகிஸ்தான் ஒன்று என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியது சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்,அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் இந்த விமர்சனத்தை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் நிராகரித்துள்ளார்.

பாதுகாப்பு நிறைந்த அமைப்புகளால்
இது தொடர்பாக ஷெபாஸ் ஷெரீப் கூறுகையில், ''பாகிஸ்தான் பொறுப்பு மிக்க அணு ஆயுத நாடு என்பதை பல தசாப்தங்களாக நிரூபித்து வருகிறது. இப்படி இருக்கும் நிலையில், அணு ஆயுதம் தொழில்நுட்ப ரீதியாகவும் தவறு ஏற்பட வாய்ப்பே இல்லாத அளவுக்கு பாதுகாப்பு நிறைந்த அமைப்புகளால் நிர்வகிக்கப்படுகிறது. அணு ஆயுத விவகாரங்களை பொறுத்தவரை சர்வதேச தரநிலைகளை கடைப்பிடிக்கும் வகையில் பாகிஸ்தான் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது'' என்றும் தெரிவித்துள்ளார்.

எங்களின் உண்மையான விருப்பம்
பாகிஸ்தானும் அமெரிக்காவும் பரஸ்பரம் நன்மை பயக்கும் வகையிலான நீண்ட நால நட்புறவு என்ற வரலாற்றை கொண்ட நாடுகளாகும். உலகம் மிகப்பெரும் சர்வதேச சவால்களை எதிர்கொண்டு வரும் இந்த தருணத்தில் பாகிஸ்தான் - அமெரிக்கா இடையேயான உறவின் உண்மையான ஆற்றலை உணர தேவையற்ற கருத்துக்களை தவிர்த்து உண்மையான மற்றும் நீடித்த முயற்சிகள் மேற்கொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த அமெரிக்காவுடன் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என்பதே எங்களின் உண்மையான விருப்பம் ஆகும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
-
அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! முகத்திலேயே விழுந்த அடி.. கப்பலை கூட அனுமதிக்காத ஈரான்! இதெல்லாம் தேவை தானா -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications