ஆபத்தான நாடு என்பதா?.. ஜோ பைடனின் கருத்துக்கு எதிராக பொங்கி எழுந்த பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்று என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறிய நிலையில், பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பையே பாகிஸ்தான் விரும்புகிறது என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் ஆளும் கட்சியின் பிரசார கூட்டம் நடந்தது. இதில் அந்நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் கலந்துகொண்டார்.

ஜோ பைடன் உரை
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- உலகம் மிக வேகமாக மாறி வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு, உலகை வழிநடத்தி செல்லும் ஆற்றல் அமெரிக்காவுக்கு இருக்கிறது. இது கட்டுப்பாட்டுக்கு அப்பால் உள்ளது. தனி நபரினாலோ அல்லது ஒரு குறிப்பிட்ட நாட்டினாலோ அல்ல என்று கூறினார். பாகிஸ்தானின் அணு ஆயுதங்களின் பாதுகாப்பு குறித்து மேற்கத்திய நாடுகள் கவலை தெரிவித்துவரும் நிலையில் அது குறித்தும் ஜோ பைடன் பேசினார்.

பாகிஸ்தான் பிரதமர் மறுப்பு
அப்போது ஜோ பைடன், 'உலகின் மிக ஆபத்தான நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் இருக்கலாம்.. அந்நாட்டில் அணு ஆயுதங்களில் எந்த ஒரு ஒற்றுமையும் இல்லாத நிலை நிலவி வருகிறது' என்றார். மிகவும் ஆபத்தான நாடுகளில் பாகிஸ்தான் ஒன்று என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியது சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்,அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் இந்த விமர்சனத்தை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் நிராகரித்துள்ளார்.

பாதுகாப்பு நிறைந்த அமைப்புகளால்
இது தொடர்பாக ஷெபாஸ் ஷெரீப் கூறுகையில், ''பாகிஸ்தான் பொறுப்பு மிக்க அணு ஆயுத நாடு என்பதை பல தசாப்தங்களாக நிரூபித்து வருகிறது. இப்படி இருக்கும் நிலையில், அணு ஆயுதம் தொழில்நுட்ப ரீதியாகவும் தவறு ஏற்பட வாய்ப்பே இல்லாத அளவுக்கு பாதுகாப்பு நிறைந்த அமைப்புகளால் நிர்வகிக்கப்படுகிறது. அணு ஆயுத விவகாரங்களை பொறுத்தவரை சர்வதேச தரநிலைகளை கடைப்பிடிக்கும் வகையில் பாகிஸ்தான் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது'' என்றும் தெரிவித்துள்ளார்.

எங்களின் உண்மையான விருப்பம்
பாகிஸ்தானும் அமெரிக்காவும் பரஸ்பரம் நன்மை பயக்கும் வகையிலான நீண்ட நால நட்புறவு என்ற வரலாற்றை கொண்ட நாடுகளாகும். உலகம் மிகப்பெரும் சர்வதேச சவால்களை எதிர்கொண்டு வரும் இந்த தருணத்தில் பாகிஸ்தான் - அமெரிக்கா இடையேயான உறவின் உண்மையான ஆற்றலை உணர தேவையற்ற கருத்துக்களை தவிர்த்து உண்மையான மற்றும் நீடித்த முயற்சிகள் மேற்கொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த அமெரிக்காவுடன் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என்பதே எங்களின் உண்மையான விருப்பம் ஆகும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
-
ஹார்முஸ் ஜலசந்தியில்.. அமெரிக்கப் படை முற்றுகை.. ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பு.. உலகளவில் பதற்றம்! -
ஈரான் பிடிவாதம்.. விடாமல் காய் நகர்த்திய டிரம்ப்.. உலகையே உலுக்கிய அந்த 20 மணி நேரம்.. நடந்தது என்ன? -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம்












Click it and Unblock the Notifications