அன்னை தெரசா புனிதராக பிரகடனம்- வாடிகனில் போப் பிரான்சிஸ் அறிவிப்பு #teresa #saint
வாடிகன்: அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசாவை போப் பிரான்சிஸ் இன்று புனிதராக அறிவித்தார். வாடிகனில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற விழாவில் அன்னை தெரசா புனிதராக பிரகடனம் செய்யப்பட்டார்.
அல்பேனியாவில் பிறந்து 1929-இல் கத்தோலிக்க மதச் சேவைக்காக இந்தியா வந்தார் அன்னை தெரசா. கொல்கத்தா நகரில் உள்ள ஏழைகளுக்கு பல்வேறு சேவைகள் புரிந்த அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் அன்னை தெரசாவுக்கு வழங்கப்பட்டது. கடந்த 1997-ஆம் ஆண்டு கொல்கத்தா நகரில் அன்னை தெரசா காலமானார்.
|
அருளாளர் பட்டம்
அவரது மறைவுக்குப் பிறகு இரண்டு முறை அற்புதங்களை நிகழ்த்தியதாக கடந்த 2003-ஆம் ஆண்டில் அப்போதைய போப் ஜான் பால், தெரசாவுக்கு அருளாளர் பட்டம் அளித்தார்.

வாடிகன் தேவாலயத்தில்..
அதைத் தொடர்ந்து தெரசாவுக்குப் புனிதர் பட்டம் அளிக்கப்படும் என்று போப் பிரான்சிஸ் கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். இன்று வாடிகன் தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ், அன்னை தெரசாவை புனிதராக பிரகடனம் செய்தார்.

சுஷ்மா குழு
இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் 12 பேர் கொண்ட மத்திய பிரதிநிதிகள் குழுவும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது.

கேஜ்ரிவால், மமதா பானர்ஜி
மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான குழுவும், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான குழுவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மிஷினரி ஆஃப் சாரிட்டீஸ் அமைப்பின் தலைவர் சகோதரி மேரி பிரேமா தலைமையில் நாடு முழுவதிலும் இருந்து 50 கன்னியாஸ்திரிகளும், கொல்கத்தா பேராயர் தாமஸ் டிசோசா தலைமையில் இந்தியாவில் உள்ள 45-க்கும் மேற்பட்ட பேராயர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications