தன்பாலின திருமணங்கள்: தோல்வியடைந்த பொதுவாக்கெடுப்பு
தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வமான தடை விதிப்பது தொடர்பாக ரோமானியாவில் நடந்த பொது வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது. ஐந்தில் ஒரு பங்கு வாக்காளர்கள் மட்டுமே இந்த வாக்கெடுப்பில் பங்கேற்றனர்.
எதிர்பாலினங்கள் மட்டுமே திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று மக்கள் சட்டமேற்ற விரும்புகிறார்களா என்று ரோமானிய மக்களிடம் கேட்கப்பட்டது.
ஆனால், இதில் 20.4 சதவீத வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தனர். குறைந்தது 30 சதவீத வாக்குகள் பதிவானால் மட்டுமே வாக்கெடுப்பு கருத்தில் கொள்ளப்படும்.
ஆச்சர்ய முடிவு
ஆனால், வாக்களித்தவர்களில் 90 சதவீத பேர் எதிர்பாலினங்கள் மட்டுமே திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று வாக்களித்திருந்தனர்.
இந்த வாக்கெடுப்பு ஆதரவான கூட்டணியின் தலைவர் மிகாய், அரசியல் சாசன நிலையில், ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான திருமண பந்தத்தை பாதுகாக்க முயற்சி செய்யப்படுவதாக பிபிசியிடம் தெரிவித்தார்.
எனினும், ரோமானியா நாட்டின் வழக்கம் அவ்வளவாக மாறாது. அங்கு ஓரினசேர்க்கையாளர் திருமணம் மற்றும் சிவில் யூனியன்கள் ஆகியவை அங்கீகரிக்கப்படாது.
வாக்கெடுப்பு எதிராக இருக்கும் பிரதான எதிர்கட்சியை சேர்ந்த டான் பர்னா, பொதுமக்கள் பணமான 40 மில்லியன் யூரோக்களை இதில் வீணடித்ததற்காக அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஆளும் கட்சியான சமூக ஜனநாயக கட்சியும் இந்த வாக்கெடுப்புக்கு ஆதரவு அளித்திருந்தது.
பிற செய்திகள்:
- 1500 ஆண்டுகள் பழமையான வாளை கண்டுபிடித்த 8 வயது சிறுமி
- இலங்கையின் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது
- என் குழந்தையை ஏரியில் வீசியது ஏன்? - தாயின் வாக்குமூலம்
- சௌதி தூதரகத்தில் பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டாரா?
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?














Click it and Unblock the Notifications