கார் எஞ்சினுக்குப் பின்னால் பதுங்கிப் படுத்தபடி ஸ்பெயினுக்கு அகதியாக வந்த கினியா இளைஞர்!
மேட்ரிட்: ஆப்ரிக்காவில் இருந்து ஓடும் கார் எஞ்சினில் பதுங்கி ஸ்பெயினுக்கு ஊடுருவிய வாலிபர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேலையில்லா திண்டாட்டம், வறுமை ஆகியவற்றை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பலர் உயிரைப் பணயம் வைத்து உரிய அனுமதியின்றி ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக குடியேறி வருகின்றனர்.
அவ்வகையில், ஹங்கேரி நாட்டின் வழியாக கடந்த வாரம் ஒரு சரக்கு லாரிக்குள் மறைந்தபடி ஆஸ்திரியா நாட்டுக்குள் நுழைய முயன்ற 71 பேர் அந்த லாரிக்குள் மூச்சுத்திணறி பிணமாக கிடந்து கண்டுபிடிக்கப்பட்டனர்.

அதிகாரிகளால் கைது:
இந்த செய்தி அளித்த அதிர்ச்சியில் இருந்து பலர் இன்னும் மீளாமல் உள்ள நிலையில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கினியாவில் இருந்து ஓடும் காரின் எஞ்சின் பகுதிக்குள் பதுங்கியபடி ஸ்பெயின் நாட்டுக்குள் ஊடுருவ முயன்ற ஒரு வாலிபரை அந்நாட்டு குடியுரிமைத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
போலீசார் சோதனை:
மொராக்கோ நாட்டு எல்லை வழியாக வந்து கொண்டிருந்த வாகனங்களை ஸ்பெயின் நாட்டு எல்லைப் பகுதியான குவெட்டா பகுதியில் குடியுரிமைத்துறை அதிகாரிகளும், போலீசாரும் சோதனையிட்டுக் கொண்டிருந்தனர்.
மயங்கிய நிலையில் வாலிபர்:
அப்போது, சந்தேகத்துக்குரிய ஒரு காரை மடக்கி சோதனையிட்டபோது, பொருட்களை வைக்கும் காரின் பின்பகுதியில் கினியா நாட்டை சேர்ந்த ஒரு வாலிபர் மறைந்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, அதே காரின் எஞ்சின் அமைந்திருக்கும் பானெட் பகுதியை திறந்துப் பார்த்தபோது, மயங்கிய நிலையில் ஒரு வாலிபர் படுத்துக் கிடப்பதை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை:
கார் எஞ்சினுக்குள் இருந்து வெளியாகும் பெட்ரோல் எரியும் நெடி மற்றும் உச்சகட்ட அனலை தாங்கிக்கொண்டு அவர் எப்படி உயிரோடு இருந்தார் என்பதை கண்டு வியந்த அவர்கள், அந்த வாலிபரை கைது செய்து, அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
கடலில் மூழ்கி உயிரிழப்பு:
இதேபோல், நைஜீரியாவை சேர்ந்த சிலர் ஆஸ்திரேலியாவில் குடியேற விரும்பி அவ்வப்போது கள்ளத்தனமாக படகுகளில் செல்வதும், அவர்களில் சரிபாதி பேர் விபத்துகளில் சிக்கி, கடல் நீரில் மூழ்கி உயிரிழந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications