மனித மாமிசம் போன்ற ருசி.. சர்ச்சையில் சிக்கிய ஸ்வீடன் நிறுவனத்தின் புதிய பர்கர்!
நர மாமிச சுவையில் புதிய பர்கரை அறிமுகப்படுத்தியுள்ளது ஸ்வீடன் நிறுவனம் ஒன்று.
ஸ்டாக்ஹோம் : ஸ்வீடனைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று நர மாமிச சுவையில் பர்கரைத் தயாரித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'இந்தப் பொறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிடக் கிடைச்சது..' என விதவிதமாக சாப்பாட்டு சுவையைத் தேடி அலைபவர்கள் உலகம் முழுவதுமே இருக்கிறார்கள். இவர்களது நாவிற்கு விருந்து வைப்பது போன்ற சுவையைத் தருவதற்காக உணவு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு புதுப்புது உணவு வகைகளை அறிமுகப்படுத்துகின்றன. இதற்கென பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்தி, அவை புதிய சுவைகளை கண்டுபிடிக்கின்றன.
அப்படி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய உணவுதான், நர மாமிச சுவையில் உருவாக்கப்பட்டுள்ள வேகன் பர்கர்.

பர்கர் அறிமுகம்
ஸ்வீடனைச் சேர்ந்த Oumph! என்ற நிறுவனம் தான் இந்த பர்கரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தாவரங்களைக் கொண்டு இறைச்சி தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இதுவரை யாரும் கண்டுபிடித்திராத புதிய வகை உணவைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற நீண்ட ஆராய்ச்சிக்குப் பின் இந்தப் பர்கரை அந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.

நர மாமிச சுவை
இந்த பர்கரில் வைக்கப்பட்டுள்ள பேட்டி(patty)யானது, முற்றிலும் தாவரங்களை கொண்டு தயாரிக்கப்பட்டதுதான். ஆனால் சுவையில் இது மனித மாமிசத்தைப் போன்று இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த பேட்டியை வைத்து மற்ற பர்கர்களைப் போலவே இதனை தயாரித்துத் தருகின்றனர்.

விருது
விலங்கு வதையை விரும்பாதவர்கள், வீகன் உணவுப் பிரியர்களுக்காக பிரத்யேகமாக இந்த வகை மாமிச பர்கர் உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு, விலங்குகளை வளர்ப்பதால் சுற்றுச்சூழலுக்கும் அதிக பாதிப்பு ஏற்படுவதாகவும், இது போன்ற மாற்று கண்டுபிடிப்புகள் மூலம் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும் எனக் கூறப்படுகிறது. இந்த பர்கரை தயார் செய்ததற்காக இந்நிறுவனத்திற்கு சில்வர் லயன் (Silver Lion) என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

கண்டனம்
கடந்த ஆண்டு ஹாலோவன் (Halloween) கொண்டாடப்பட்டபோது முதன் முதலில் இந்த போலி நர மாமிசம் தயாரிக்கப்பட்டது. அப்போதே இது சர்ச்சையில் சிக்கியது. ஒருவேளை மனிதர்கள் இதுபோன்று நரமாமிச சுவைக்குப் பழகினால், அது எதிர்காலத்தில் பெரும் பிரச்சினைக்கு வழி வகுக்கும் என பலர் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் அதற்கும் இந்நிறுவனம் விளக்கம் அளித்தது.

இதுதான் காரணம்
அதில், 'எங்களது நோக்கம் இந்த தாவர இறைச்சியை மனிதர்கள் சாப்பிடவேண்டும் என்பதே தானே, தவிர மனிதனின் இறைச்சியைச் சாப்பிட சொல்வது அல்ல' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், தங்களது இந்த புதிய பர்கர் குறித்து, அந்நிறுவனத்தின் நிர்வாகிகளில் ஒருவரான ஆன்ட்ரே லிண்டென் கூறுகையில், "எங்களுக்கு எந்த விதமான சுவையும், அமைப்பும் வேண்டும் என்று தெரிந்த பின், இந்த பர்கரை சீக்கிரமாக தயாரித்துவிட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications