800 ஆண்டுகள் பழமையான மொசூல் பெரிய மசூதியை வெடி வைத்து தகர்த்தது ஐஎஸ்ஐஎஸ்... ஈராக் குற்றச்சாட்டு
ஈராக் மொசூல் நகர பெரிய மசூதியை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர்தான் வெடி வைத்துத் தகர்த்தனர் என்று ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாதி தெரிவித்துள்ளார்.
பாக்தாத்: ஈராக் நாட்டின் பெரிய மசூதியை வெடிவைத்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் தகர்த்து விட்டனர் என்று அந்நாட்டு பிரதமர் ஹைதர் அல் அபாதி கூறியுள்ளார். மேலும், அந்த மசூதி தகர்ப்பின் மூலம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரமாண்ட கோள் வடிவ கோபுரங்களைக் கொண்ட அந்த பிரபலமான பெரிய மசூதியில்தான், ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி, கடந்த 2014ம் ஆண்டு தனது இஸ்லாமிய ராஜ்யத்தை அறிவித்தார்.

இப்போது அவர்களே அதை தகர்த்துள்ளனர். ஆனால் மசூதியை அமெரிக்க விமானம்தான் தகர்த்தது என ஐஎஸ் அமைப்பு தனது செய்தி நிறுவனமான அமாக் மூலம் வெளியிட்டுள்ள குறிப்பில் கூறியுள்ளது.
800 ஆண்டுகால மொசூல் நகர பெரிய மசூதியை ஐஎஸ்ஐஎஎஸ் அமைப்பினர் தர்த்துவிட்டனர். அவர்கள் வரலாற்று பிழையை செய்துவிட்டனர். அந்த மசூதியில் இருந்து 50 மீட்டர் தொலைவிலேதான் நாங்கள் இருந்தோம். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்தான் மசூதியை தகர்த்தனர் என்று ஈராக் ராணுவமும் கூறியுள்ளது.
ஐஎஸ் அமைப்பு மொசூல் மற்றும் ஈராக்கின் பெரும் பொக்கிஷங்களில் ஒன்றை தகர்த்துவிட்டது என்று ஈராக்கில் உள்ள, மூத்த அமெரிக்க படை தளபதி தெரிவித்துள்ளார். மொசூல் நகர பெரிய மசூதி 1172ம் ஆண்டில் துருக்கி நாட்டு அரசர் நினைவாக கட்டப்பட்டது ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications