அமெரிக்க காங்கிரஸில் டிரம்ப் "கன்னி"ப் பேச்சு.. இந்திய என்ஜீனியர் கொலைக்குக் கண்டனம்
வாஷிங்டன்: கன்சாஸில் இந்திய என்ஜினியர் கொல்லப்பட்டதை கண்டிக்கிறேன். மீண்டும் இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு டொனால்டு டிரம்ப் முதல் முறையாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றினார். அவர் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தபோதே அங்கிருந்தவர்கள் கைதட்டி அவரை வரவேற்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பேசிய டிரம்ப் கூறுகையில்,

கனவு
அமெரிக்காவில் தன்னம்பிக்கை அதிகரித்து வருகிறது. இதன் மூலம் சாத்தியமில்லாத கனவுகள் கூட நிறைவேறும். இன்று நான் காண்பது அமெரிக்கா துடிப்பானதாக மாறியுள்ளதை தான்.

வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். குடுயேற்ற சட்டத்தை கொண்டு வருவதன் மூலம் வேலையில்லாதவர்களுக்கு உதவ முடியும், கோடிக்கணக்கான டாலர்களை சேமிக்க முடியும், நம் சமூகத்தை பாதுகாப்பானதாக்க முடியும்.
|
கண்டனம்
அமெரிக்காவில் பிளவு ஏற்படுத்த நினைக்கும் சக்திகளுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். நம் தென்பகுதி எல்லையில் விரைவில் மிகப்பெரிய சுவர் எழுப்பப்படும். இஸ்லாமிய தீவிரவாதத்திடம் இருந்து நம் நாட்டை காக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கன்சாஸ் சம்பவம்
கன்சாஸில் இந்திய என்ஜினியர் கொல்லப்பட்டதை கண்டிக்கிறேன். மேலும் யூதர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வெற்றி
சட்டம் ஒழுங்கு இல்லாமல் குழப்பமாக இருக்கும் சூழலில் அமெரிக்காவால் வெற்றி பெற முடியாது. நம் குடிமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ரவுடிகள், போதைப் பொருள் விற்பனையாளர்களை கைது செய்து வருகிறோம் என்றார் டிரம்ப்.
-
அமெரிக்க பொருளாதாரம் அபாயத்தில் உள்ளதா? ஜகா வாங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.. வெளியானது முக்கிய அறிகுறி! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications