சிரியா எல்லையில் துருக்கிக்குள் நுழைந்த ரஷ்யா போர்விமானத்தால் பதற்றம்!!
அங்காரா: சிரியா எல்லையில் துருக்கி நாட்டுக்குள் ரஷ்யா போர்விமானம் சில நிமிடங்கள் பறந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அன்னிய நாட்டு விமானங்கள் அத்துமீறி பறந்தால் துருக்கி சுட்டு வீழ்த்தலாம் என்று அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக கிளர்ச்சியாளர்கள் மீது ரஷ்யா வான்தாக்குதலை நடத்தி வருகிறது. ஆசாத்தை எதிர்க்கும் அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சிக் குழுவான ப்ரீ சிரியா ஆர்மியை இலக்கு வைத்தே ரஷ்யா தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

இதனால் அமெரிக்கா கடும் கோபத்தில் உள்ளது. ஐ.எஸ். இயக்கத் தீவிரவாதிகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதாக கூறிக் கொண்டு கிளர்ச்சி குழு மீது தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது என அமெரிக்கா கூறி வருகிறது.
ஆனால் ரஷ்யாவோ, அதிபர் ஆசாத்தை யார் எதிர்த்தாலும் பயங்கரவாதிகளே எனத் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் துருக்கி எல்லையில் கிளர்ச்சி குழு மீது தாக்குதல் நடத்துவதற்காக புறப்பட்டு சென்ற ரஷ்யா போர் விமானங்கள் சிறிது தொலைவு துருக்கி வான்பரப்புக்குள் நுழைந்துவிட்டது.
இதனால் துருக்கி எச்சரிக்கை விடுத்தது. இதன்பின்னர் மோசமான வானிலையில் தவறுதலாக துருக்கி எல்லைக்குள் நுழைந்ததாக ரஷ்யாவும் அறிவித்தது. இதனால் அங்கு திடீர் பதற்றம் ஏற்பட்டது.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பு. மேலும் ரஷ்யா தமது வான்வழித் தாக்குதல் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவும், துருக்கி வான்பரப்பில் அத்துமீறி பறக்கும் அன்னிய நாட்டு விமானங்களை சுட்டு தள்ள துருக்கி அரசுக்கு உரிமை உண்டு என்று ஆதரவு தெரிவித்துள்ளது. இருப்பினும் ரஷ்யா, தவறுதலாக நுழைந்துவிட்டதாக தெரிவித்திருப்பதால் எந்த பதற்றமும் இல்லை என துருக்கி கூறியுள்ளது.
இதனிடையே ரஷ்யா, ஆசாத் எதிர்ப்பு கிளர்ச்சி குழுக்களுக்கு எதிராக தரைவழித் தாக்குதலை நடத்தவும் முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே நூற்றுக்கணக்கான ஈரான் ராணுவத்தினர் சிரியா எல்லையை சென்றடைந்துள்ளனர். இதனால் ரஷ்யா- ஈரான் கூட்டாக இணைந்து அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சி குழுக்களுக்கு எதிராக தரைவழித் தாக்குதலை விரைவில் மேற்கொள்ளக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications