உக்ரைன் - ரஷ்யா வெளியுறவு அமைச்சர்கள் இடையே 10ம் தேதி அமைதிப் பேச்சுவார்த்தை - போர் முடிவுக்கு வருமா
ரஷ்ய- உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் வரும் 10 ஆம் தேதி துருக்கியில் சந்தித்துப் பேச உள்ளனர்.
கீவ்: போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக உக்ரைன் - ரஷ்யா வெளியுறவு அமைச்சர்கள் இடையே மார்ச் 10ஆம் தேதி துருக்கியில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. போர் முடிவுக்கு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சோவியத் யூனியனின் அங்கமாக திகழ்ந்த உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 12 நாட்கள் ஆகி விட்டன. அபார பலம் கொண்ட ரஷ்யா, உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்கள் அத்தனையையும் ஏவுகணை வீச்சு, வான்தாக்குதல், பீரங்கி தாக்குதல் என நடத்தி உருக்குலைய வைத்து வருகிறது.
அதே நேரத்தில் உக்ரைனும் நாட்டைக் காக்க ஈடுகொடுத்து போராடி வருகிறது. உக்ரைன்-ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போரில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

போர் நிறுத்தம்
பெலாரஸில் இருநாட்டு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சு நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில் சில முடிவுகள் எட்டப்பட்டதை அடுத்து நான்கு முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்துவதை ரஷ்யா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

3ஆம் கட்ட பேச்சுவார்த்தை
இதனிடையே போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே மூன்றாவது கட்ட அமைதி பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. ஆனால் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.மனிதாபிமான அடிப்படையில் தளவாடங்களை மாற்ற இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இருப்பினும், நிலைமையை கணிசமாக மேம்படுத்தும் முடிவுகள் எதுவும் ஏற்படவில்லை.

மார்ச் 10 துருக்கியில் பேச்சுவார்த்தை
இந்த நிலையில் ரஷ்ய- உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் வரும் 10 ஆம் தேதி துருக்கியில் சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் ட்மிரோ குலேபா மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜே லாவ்ரோவ் ஆகியோர் துருக்கியின் கடற்கரை பகுதியான அண்டலியா மாகாணத்தில் சந்தித்துப் பேச ஒப்புக்கொண்டுள்ளனர். இரண்டு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் நேரடியாக சந்தித்துப் பேச உள்ளதால், போர் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
Recommended Video

மோடி பேச்சு
முன்னதாக நேற்றைய தினம் பாரத பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைப்பேசியில் பேசினார். உக்ரைனில் சிக்கித்தவிக்கும் மாணவர்களை மீட்பது குறித்து பேசியதோடு, இரு நாட்டு அதிகாரிகளும் போரை முடிவுக்குக் கொண்டு வர நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவதுதற்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications