ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானம் வெற்றி- சர்வதேச அரங்கில் தலைகுனிந்த போர்க்குற்றவாளி இலங்கை!
ஜெனிவா: பல லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களை இனப்படுகொலை செய்துவிட்டு போர்குற்றவாளி என்கிற அசூசையை எதுவும் இல்லாமல் சர்வதேச அரங்கில் இறுமாப்புடன் வலம் வந்த இலங்கையின் பேரினவாதத்துக்கு சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட இன்றைய தீர்மானம்.
போர்க்குற்றங்கள் புரிந்த தேசங்கள் நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் கூட தண்டிக்கப்பட்டிருக்கின்றன என்பது சரித்திரம். முள்ளிவாய்க்காலில் நந்திக்கடலில் சர்வதேசத்தின் கண் முன்னரேயே அப்பாவி ஈழத் தமிழர்கள் நச்சு பாஸ்பரஸ் குண்டுகளால் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் பலாத்காரம் செய்து படுகொலைக்குள்ளாக்கப்பட்டனர்.
வெள்ளைக்கொடி ஏந்தி வந்த போராளி தளபதிகள் படுகொலை செய்யப்பட்டனர். இலங்கையின் இந்த பச்சை இனப்படுகொலையை கண்டிக்க, தண்டிக்க எவரும் இல்லையே தமிழ்ச் சமூகம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

தமிழர் துயரம்
இந்த குமுறல்கள் மீது எரி எண்ணெய்யை ஊற்றும் விதமாக சர்வதேச அரங்குகளில் இறுமாப்புடன் மனித உரிமைகளில் ஈடுபடவே இல்லை என சண்டியர்த்தனம் பேசியது இலங்கை. ஐ.நா. மனித உரிமை சபையில் தீர்மானம் கொண்டு வரும் போதெல்லாம் லாபிகள் மூலம் இலங்கை ஜெயிப்பதும் தமிழர்கள் கூனி குறுகி நிற்கும் பேரவலமும் தொடர்ந்து கொண்டிருந்தது.

நிறைவேறிய தீர்மானம்
இன்று சரித்திரம் திரும்பி இருக்கிறது. தமிழரின் ஓயாத அழுகை அலைகளுக்கு ஓர் ஆறுதல் கிடைத்திருக்கிறது. சர்வதேச அரங்கில் போர்க்குற்றவாளியான இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்று நிறைவேறி இருக்கிறது.

இலங்கைக்கு எதிராக நாடுகள்
அதாவது நீ மனித உரிமைகளை மீறிய ஒரு குற்றவாளி என சர்வதேச சமூகம் இலங்கையை குற்றவாளிக் கூண்டிலே ஏற்ற தொடங்கி இருக்கிறது. இந்த குற்றவாளிக் கூண்டு நிச்சயம் பன்னாட்டு நீதிமன்றத்தை நோக்கி நகரும். அங்கே ராஜபக்சே சகோதரர்களும் சிங்கள பேரினவாதிகளும் தண்டனை பெறுவார்கள் என்பதற்கு ஒரு தொடக்கமாகவே இன்றைய தீர்மானத்தின் வெற்றி இருக்கிறது.

தண்டனை கிடைக்கும்
இந்த தீர்மானம், இலங்கையை பெரும் நெருக்கடிக்குள்ளாக்காது என்பது இன்றைய நிலை. ஆனால் மோசமான தண்டனைகளைப் பெற்றுத் தருவதற்கான ஆரம்பப் புள்ளி இதுதான் என்பதுதான் யதார்த்தமும் கூட.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications