காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கணவனை வெட்டிக் கொன்றுவிட்டேன்.. போலீஸ் ஸ்டேசனுக்கு நேராக போன ரஷியா.. மிரண்ட காஞ்சிபுரம் போலீஸ்

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம் : குடும்ப பிரச்சனை காரணமாக குடிபோதையில் தகராறு செய்த கணவனை காஞ்சிபுரத்தில் மனைவி வெட்டிக் கெலை செய்தார். கொலை செய்த பின்னர் காவல் நிலையத்தில் சரணடைந்த மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெரிய காஞ்சிபுரம் மளிகை தெருவைச் சேர்ந்தவர் நவ்ஷாத், ஆட்டோ ஓட்டுநரான இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தார். இந்நிலையில் ரேவதி என்ற இந்துப் பெண்ணை காதலித்து, மதம் மாற்றி ரஷியா என பெயர் மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்களுக்கு ஒரு மகள், மகன் என இரு குழந்தைகள் உள்ளனர்.

நவ்ஷத் சொந்தமாக ஆட்டோ வைத்து பிழைப்பு நடத்தி வந்த நிலையில் ஆட்டோ தொழில் சரிவர நடைபெறாத காரணத்தால் வருமானம் குறைந்த நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு நடைபெற்று வந்துள்ளது.

குடிபோதையில் மதுபாட்டிலை ஆசனவாயிலில் சொருகிய குடிகாரர்.. ஆப்ரேஷன் சக்சஸ்.. மருத்துவமனையில் கதறல் குடிபோதையில் மதுபாட்டிலை ஆசனவாயிலில் சொருகிய குடிகாரர்.. ஆப்ரேஷன் சக்சஸ்.. மருத்துவமனையில் கதறல்

குடித்துவிட்டு தகராறு

குடித்துவிட்டு தகராறு

இதன் காரணமாக நவ்ஷாத் குடிபோதைக்கு அடிமையாகி மனைவி ரஷியாவுடன் அவ்வப்போது தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல நேற்று இரவு குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

காஞ்சிபுரம் காவல் நிலையம்

காஞ்சிபுரம் காவல் நிலையம்

தகராறு முற்றிய நிலையில் கடும் கோபமடைந்த மனைவி ரஷியா அருகில் இருந்த கத்தியை எடுத்து கணவனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதனை அறிந்த ரஷியா சிவகாஞ்சி காவல் நிலையத்திற்கு தானே சென்று சரணடைந்துள்ளார்.

விசாரணை

விசாரணை

கொலை சம்பவம் குறித்து அறிந்த சிவகாஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெட்டிக் கொலை செய்யப்பட்ட நவ்ஷாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மதுபோதை காரணம்

மதுபோதை காரணம்

கொலை சம்பவம் குறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து தானாக வந்து சரணடைந்த ரஷியாவை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப பிரச்சினைக்காக நடந்த கொலையால் இரு குழந்தைகள் ஆதரவின்றி தவிக்கிறது. மதுபோதை காரணமாக சண்டை ஏற்பட்டு அது கொலையில் முடிந்துள்ளது. பெற்ற பிள்ளைகள் இப்போது தாய் தந்தை இருவரையும் பிரிந்து தவிக்கின்றன.

எப்படி சாத்தியம்

எப்படி சாத்தியம்

இந்நிலையில் நவ்ஷத் குடும்பத்தினர், இந்தக் கொலையை ரஷியா மட்டும் செய்திருக்க முடியாது,வேறு யாரோ உடனிருந்து செய்துள்ளனர் என சந்தேகத்தை எழுப்பியுள்ளதால் சிவகாஞ்சி போலீசார் கொலைச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

English summary
Kanchipuram: the wife beheaded her husband who was arguing over alcohol due to a family problem. Police are conducting a serious investigation into the wife who surrendered at the police station after the murder.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X