அதிமுக ஆட்சியில் “மாயம்”.. மீண்டும் சீனுக்கு வந்த “முகிலன்”! குவாரி கொலைக்காக போராடியபோது கைது
கரூர்: கரூரில் கல்குவாரிக்கு எதிராக போராடிய விவசாயி ஜெகநாதன் கொல்லப்பட்ட விவகாரத்தில் உடலை வாங்க மறுத்து உறவினர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் முகிலனை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர்.
கரூரில் அனுமதி இல்லாத கல்குவாரிக்கு எதிராக போராடிய விவசாயி ஜெகநாதன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார், ஓட்டுனர் சக்திவேல், கூலிப்படை கும்பலை சேர்ந்த ரஞ்சித் ஆகிய மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

காத்திருப்பு போராட்டம்
இந்த நிலையில், ஜெகநாதன் குடும்பத்தினருக்கு இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க அவரது உறவினர்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லி உடலை வாங்க மறுத்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஒரு லட்சம் உதவி
நேற்று மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குடும்பத்தினரிடம் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உள்ளிட்ட அதிகாரிகள் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டது.

பிரேத பரிசோதனை
அத்துடன் விவசாயி ஜெகநாதனின் மகன்களுக்கு கல்வி உதவிகள் வழங்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உறுதி அளித்துள்ளார். இந்த நிலையில் கொலை வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக கூறிய குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

முகிலன் கைது
இருப்பினும் தமிழக அரசு ஜெகநாதன் குடும்பத்தாருக்கு ரூ.1 கோடி நிதி உதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கக்கோரி உடலை வாங்க மறுத்து, காத்திருப்பு போராட்டம் தொடரும் என்று ஜெகநாதன் குடும்பத்தினர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் அறிவித்தனர். இந்த நிலையில் நேற்று மருத்துவமனையில் நின்றுகொண்டிருந்த முகிலனையும் வழக்கறிஞர் சண்முகத்தையும் போலீசார் கைது செய்தனர்.

மாயமான முகிலன்
ஜெகன்நாதன் உடலை பெற விடாமல் குடும்பத்தினரை தடுத்து அரசுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி முகிலனை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து உறவினர்கள் உடலை பெற்றுக்கொண்டனர். கடந்த அதிமுக ஆட்சியின்போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட காவல் அதிகாரிகளுக்கு எதிராக ஆதாரங்களை வெளியிட்ட முகிலன் சில மாதங்கள் காணாமல்போனபோது அவருக்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட தலைவர்கள் குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
-
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
ரூ.2000 ஆக உயர்த்தப்படும் மகளிர் உரிமைத் தொகை.. மாணவிகளுக்கு இனி ரூ.1500! ஸ்டாலின் வாக்குறுதி! -
35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. திமுக அளித்த மேஜர் வாக்குறுதி! -
வேட்பாளரை மாற்றுங்க.. அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட்ட.. தாம்பரம் எம்எல்ஏ SR ராஜா ஆதரவாளர்கள் -
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
4 மண்டலங்களாக.. வகுக்கப்படும் தமிழ்நாடு.. திமுகவின் மிகப்பெரிய வாக்குறுதியே இதுதான்.. அடிதூள்! -
Rahul Gandhi: தமிழக அரசியல் மீது ராகுல் காந்தியின் பாராமுகம்… திமுக தலைமை மீது அதிருப்தியா? -
விவசாயிகளுக்கு திமுகவின் ‘ஜாக்பாட்’! மீட்டர் பொருத்தப்படாத நவீன பம்ப்செட் வழங்கப்படும் என வாக்குறுதி -
நன்னிலம் தொகுதி வேட்பாளர் முகமது முபாரக்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் எஸ்டிபிஐ! -
DMK Manifesto: முதியோர் உதவித்தொகை இனி ரூ. 2 ஆயிரமாக உயர்வு.. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்!












Click it and Unblock the Notifications