அதிமுக ஆட்சியில் “மாயம்”.. மீண்டும் சீனுக்கு வந்த “முகிலன்”! குவாரி கொலைக்காக போராடியபோது கைது
கரூர்: கரூரில் கல்குவாரிக்கு எதிராக போராடிய விவசாயி ஜெகநாதன் கொல்லப்பட்ட விவகாரத்தில் உடலை வாங்க மறுத்து உறவினர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் முகிலனை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர்.
கரூரில் அனுமதி இல்லாத கல்குவாரிக்கு எதிராக போராடிய விவசாயி ஜெகநாதன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார், ஓட்டுனர் சக்திவேல், கூலிப்படை கும்பலை சேர்ந்த ரஞ்சித் ஆகிய மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

காத்திருப்பு போராட்டம்
இந்த நிலையில், ஜெகநாதன் குடும்பத்தினருக்கு இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க அவரது உறவினர்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லி உடலை வாங்க மறுத்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஒரு லட்சம் உதவி
நேற்று மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குடும்பத்தினரிடம் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உள்ளிட்ட அதிகாரிகள் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டது.

பிரேத பரிசோதனை
அத்துடன் விவசாயி ஜெகநாதனின் மகன்களுக்கு கல்வி உதவிகள் வழங்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உறுதி அளித்துள்ளார். இந்த நிலையில் கொலை வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக கூறிய குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

முகிலன் கைது
இருப்பினும் தமிழக அரசு ஜெகநாதன் குடும்பத்தாருக்கு ரூ.1 கோடி நிதி உதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கக்கோரி உடலை வாங்க மறுத்து, காத்திருப்பு போராட்டம் தொடரும் என்று ஜெகநாதன் குடும்பத்தினர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் அறிவித்தனர். இந்த நிலையில் நேற்று மருத்துவமனையில் நின்றுகொண்டிருந்த முகிலனையும் வழக்கறிஞர் சண்முகத்தையும் போலீசார் கைது செய்தனர்.

மாயமான முகிலன்
ஜெகன்நாதன் உடலை பெற விடாமல் குடும்பத்தினரை தடுத்து அரசுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி முகிலனை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து உறவினர்கள் உடலை பெற்றுக்கொண்டனர். கடந்த அதிமுக ஆட்சியின்போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட காவல் அதிகாரிகளுக்கு எதிராக ஆதாரங்களை வெளியிட்ட முகிலன் சில மாதங்கள் காணாமல்போனபோது அவருக்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட தலைவர்கள் குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
-
சபரீசன் கையில் விரைவில் திமுக.. அப்படியே ஆந்திரா ஸ்டைல்.. அணுகுண்டை வீசிய அஇஅதிமுக உதயகுமார் -
பிரேமலதா குடும்பத்திற்கு ஸ்டாலின் தரும் இன்னொரு சர்ப்ரைஸ்! பிரபாகரன் போட்டியிடும் தொகுதி -EXCLUSIVE -
"5000 பேருடன் உறவு.. அதுக்கு என்ன இப்போ?" கள்ள உறவை வசமாக பிடித்த மனைவி.. அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் -
Kanimozhi: சட்டசபைத் தேர்தலில் களமிறங்கும் கனிமொழி? எந்த தொகுதியில் களமிறங்க வாய்ப்பு? -
நெல்லை முபாரக் எங்கே போட்டி? திமுகவிடம் எஸ்டிபிஐ எதிர்பார்க்கும் தொகுதி எது? பரபரக்கும் தேர்தல் களம் -
வைத்திலிங்கத்திற்கு தஞ்சை திமுக ஷாக்! ஆதிக்கம் செலுத்தும் உதயநிதி ஆதரவாளர்? ஒரத்தநாடு என்னாகும்? -
காமராஜர் ஆட்சிக்கு வேட்டு.. இந்திரா ஆட்சிக்கு ஓட்டு.. திமுக ஆடிய டபுள் கேம்! -
தமிழக தேர்தல் வரலாறு: கருணாநிதிக்கு உதயசூரியன்.. நெடுஞ்செழியனுக்கு சேவல்.. திமுகவின் முதல் சம்பவம்! -
முக்கிய அமைச்சராச்சே.. இவருக்கே இவ்வளவு டஃப்பா.. சிட்டிங் மினிஸ்டருக்கு சிக்கல்.. ஸ்டாலின் பிளானிங் -
20 தொகுதிகள்.. அதிமுகவில் இருந்து வந்தவர்களை அரவணைக்கும் அறிவாலயம்.. சரிகட்டும் வேலையில் ஸ்டாலின்! -
முக்குலத்தோர் வாக்குகள்.. 6 மாவட்டங்களில் திமுகவின் மைக்ரோ பிளான்.. ஓபிஎஸ் மூலமாக அதிமுகவுக்கு செக்! -
“பைத்தியக்காரத்தனம்”.. திமுக சட்ட எரிப்பைக் கிண்டல் செய்த பெரியார்? கெடு விதித்த அண்ணா!












Click it and Unblock the Notifications