அதிமுக ஆட்சியில் “மாயம்”.. மீண்டும் சீனுக்கு வந்த “முகிலன்”! குவாரி கொலைக்காக போராடியபோது கைது
கரூர்: கரூரில் கல்குவாரிக்கு எதிராக போராடிய விவசாயி ஜெகநாதன் கொல்லப்பட்ட விவகாரத்தில் உடலை வாங்க மறுத்து உறவினர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் முகிலனை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர்.
கரூரில் அனுமதி இல்லாத கல்குவாரிக்கு எதிராக போராடிய விவசாயி ஜெகநாதன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார், ஓட்டுனர் சக்திவேல், கூலிப்படை கும்பலை சேர்ந்த ரஞ்சித் ஆகிய மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

காத்திருப்பு போராட்டம்
இந்த நிலையில், ஜெகநாதன் குடும்பத்தினருக்கு இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க அவரது உறவினர்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லி உடலை வாங்க மறுத்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஒரு லட்சம் உதவி
நேற்று மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குடும்பத்தினரிடம் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உள்ளிட்ட அதிகாரிகள் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டது.

பிரேத பரிசோதனை
அத்துடன் விவசாயி ஜெகநாதனின் மகன்களுக்கு கல்வி உதவிகள் வழங்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உறுதி அளித்துள்ளார். இந்த நிலையில் கொலை வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக கூறிய குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

முகிலன் கைது
இருப்பினும் தமிழக அரசு ஜெகநாதன் குடும்பத்தாருக்கு ரூ.1 கோடி நிதி உதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கக்கோரி உடலை வாங்க மறுத்து, காத்திருப்பு போராட்டம் தொடரும் என்று ஜெகநாதன் குடும்பத்தினர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் அறிவித்தனர். இந்த நிலையில் நேற்று மருத்துவமனையில் நின்றுகொண்டிருந்த முகிலனையும் வழக்கறிஞர் சண்முகத்தையும் போலீசார் கைது செய்தனர்.

மாயமான முகிலன்
ஜெகன்நாதன் உடலை பெற விடாமல் குடும்பத்தினரை தடுத்து அரசுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி முகிலனை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து உறவினர்கள் உடலை பெற்றுக்கொண்டனர். கடந்த அதிமுக ஆட்சியின்போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட காவல் அதிகாரிகளுக்கு எதிராக ஆதாரங்களை வெளியிட்ட முகிலன் சில மாதங்கள் காணாமல்போனபோது அவருக்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட தலைவர்கள் குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்!











Click it and Unblock the Notifications