படிச்சு படிச்சு சொன்னோமே.. கேட்கலையே.. தேம்பி தேம்பி அழுத அன்பில் மகேஷ்.. கலங்கிய செந்தில் பாலாஜி
சென்னை: தவெக தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கரூர் சம்பவம் ஒட்டு மொத்த நாட்டிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் உறவினர்களின் கண்ணீர், காயமடைந்தவர்களின் துடிப்பு என்று கரூர் மருத்துவமனை நிலவரம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் முகாமிட்டுள்ள அமைச்சர் அன்பில் மகேஸ் கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.
நடிகரும், தவெக தலைவருமான விஜய் ஒவ்வொரு சனிக்கிழமையும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். திருச்சி, அரியலூர், நாகைப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் அவர் ஏற்கனவே பிரச்சாரம் செய்துவிட்டார். இன்று அவர் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திட்டமிட்ட நேரத்தை விட சற்று கால தாமதமாக விஜய் சென்றதாக புகார் எழுந்தது.

தவெக கூட்ட நெரிசல்
கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை விஜய் கூட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை என்ற அந்தக் கட்சியினர் புகார் தெரிவித்தனர். கரூர் விஜய் கூட்டத்திற்கு சுமார் 10,000 பேர் வருவார்கள் என்று தவெகவினர் கூறியிருந்தனர். ஆனால் அதிகளவு கூட்டம் கூடியது. ஒரு கட்டத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் கடுமையான நெரிசல் ஏற்பட்டது.
கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 38 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அதில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னை, சேலத்தில் இருந்து மருத்துவக் குழுவினர் கரூர் விரைந்துள்ளனர். இந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணீரில் கரூர்
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்னும் சிறிது நேரத்தில் கரூர் செல்லவுள்ளார். அமைச்சர்கள் பலரும் கரூரில் முகாமிட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோர் கரூரில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் கரூர் அரசு மருத்துவமனையில் இருந்து பணிகளை ண்காணித்து வருகிறார்கள்.
கரூர் மருத்துவமனையில் திரும்பிய பக்கமெல்லாம் மரண ஓலம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. உறவுகளின் கண்ணீர் நெஞ்சை உலுக்கி வருகிறது. ஒவ்வொருவரின் கண்ணீரின் பின்னணியிலும் ஆழமான சோகம் மறைந்துள்ளது. அதை காணும் யாராக இருந்தாலும் மனம் கடுமையாக பாதிக்கப்படும். நிவாரணப் பணியில் இருப்போரும் மிகுந்த வேதனையுடன் பணியில் செய்து வருகிறார்கள்.
அன்பில் மகேஸ் வேதனை
இந்நிலையில் உயிரிழந்த மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து விட்டு அவர்களின் சோகம், கண்ணீரை பார்த்து அன்பில் மகேஸ், செந்தில் பாலாஜி மிகுந்த சோகத்துடன் காணப்படுகிறார்கள். அப்போது அன்பில் மகேஸ், "படிச்சு படிச்சு சொன்னேன் கண்டிஷனை பாலோ பண்ணுங்கனு கேட்டீங்களா." என்று கண்ணீர் விட்டு அழுதபடி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அவரின் அருகிலேயே செந்தில் பாலாஜியும் கண் கலங்கிய படி சோகமாக நிற்கிறார். அன்பில் மகேஸ் கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications