அரசு நிகழ்ச்சியில் திடீர் மின்தடை.. 15 நிமிடம் பேசாமலேயே நின்ற எம்எல்ஏ..கிருஷ்ணகிரி பரபரப்பு
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் இரு அமைச்சர்கள் பங்கேற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் எம்எல்ஏ பிரகாஷ் பேசியபோது ஏற்பட்ட மின்தடை 15 நிமிடங்கள் நீடித்ததால் செய்வதறியாமல் திகைத்து நின்றார்
Recommended Video
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பல்வேறு இடங்களில் பட்டுவளர்ச்சித்துறை சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க இரண்டு அமைச்சர்கள் வருகை தந்துள்ளனர்..
ஒசூர் மாநகராட்சி ராம் நகர் பகுதியிலுள்ள பட்டுவளர்ச்சி அலுவலகத்தில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த 689 பட்டு விவசாயிகளுக்கு 2.15கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அரசு சார்பில் நிகழ்ச்சி
சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் த.மோ.அன்பரசன், கைத்தறி அமைச்சர் காந்தி ஆகிய இரண்டு அமைச்சர்கள் பங்கேற்றனர். இதேபோல் தளி,ஒசூர்,பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் மேயர் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்த கூட்டத்தில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூர் எம்எல்ஏவுமான Y.பிரகாஷ் அவர்கள் பேச தொடங்கிய ஒரு நிமிடத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டது.

திடீர் மின்தடை
மின்தடை உடனடியாக சீரமைக்கப்படும் என எதிர்ப்பார்த்த நிலையில் கிட்டதட்ட 15 நிமிடங்கள் வரை மின்தடை சரிசெய்ய தேவைப்பட்டதால் பேசமுடியாமலும், மைக் முன்பு நின்று செய்வதறியாமல் கூட்டத்தை பார்த்து திகைத்தார். பொறுமையை இழந்த பிரகாஷ் அவர்கள் மின் தடை குறித்து அவரே விசாரிக்க மேடையிலிருந்து இறங்கி சென்றபோது, மின்தடை சரிசெய்யப்பட்டது.

நிகழ்ச்சி தாமதம்
பின்னர் பேச வந்ததை சுறுக்கிக்கொண்டு பேச்சை நிறைவு செய்தார் பிரகாஷ். நிகழ்ச்சி முடிந்த பின்னர் மின்வாரிய அதிகாரிகளை அழைத்து இதுபோன்ற சம்பவங்கள் நிகழாவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டுமெனவும், பொதுமக்கள் மின் தடையால் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அறிவுரை கூறினார். இதனால் நிகழ்ச்சி சிறிது நேரம் தாமதமானது.

அமைச்சர் த.மோ.அன்பரசன்
நிகழ்ச்சி முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் த.மோ. அன்பரசன், தமிழகத்தில் பட்டு வளர்ப்பை அதிகப்படுத்தவும், தேவையை பூர்த்தி செய்ய 3700 ஏக்கருக்கு வழங்கப்பட்ட மானியம், 5000 ஏக்கர் நிலமாக அதிகரித்தும் பட்டுப்புழு வளர்க்க செட்டு அமைக்கப்பட 87 ஆயிரம் ரூபாய் நிதியை தற்போதைய தமிழக அரசு 1,20,000 ரூபாய் வரை அதிகரித்து வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
-
டெல்டாவில்.. முக்கிய தொகுதியிலேயே அடிவாங்கும் திமுக.. சிக்கலில் பெரிய மீன்! இவருக்கே இந்த நிலைமையா? -
38 நாட்களில் தமிழ்நாட்டில் தேர்தல்.. இந்த விஷயங்களை மறக்காதீங்க! முடிவை தீர்மானிக்க போவதே இதான் -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
அடி தூள்! காலையில் கோரிக்கை.. மாலையே நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்.. பத்திரிகையாளர் பென்ஷன் உயர்வு! -
10 மாவட்டத்தில் திமுகவுக்கு ரெட் சிக்னல்.. கொங்கு நிலவரத்தால் சோகத்தில் அறிவாலயம்.. ஸ்டாலின் முடிவு! -
சீட் நம்பரை குறைக்கும் திமுக.. ஏன் அதிக தொகுதிகள் வேண்டும்? அழுத்தமாக பேசிய கே.பாலகிருஷ்ணன்! -
பெண்களிடம் தவறாக பேசினேனா? வைரலாகி வரும் ஸ்கிரீன்ஷாட் தொடர்பாக ராஜீவ் காந்தி விளக்கம்! -
“ரஜினியை மிரட்ட முடியாது.. யாருக்கும் அடிபணிய மாட்டார்” - தவெக ஆதவ் அர்ஜுனாவுக்கு திமுக பதிலடி! -
திமுகவின் அடுத்த அதிரடி.. கொமதேகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு.. கையெழுத்தான ஒப்பந்தம்! -
திமுக - காங்கிரஸ்.. யார் அதிக இடங்களில் போட்டி? புதுச்சேரியில் தொடங்கியது பேச்சுவார்த்தை! -
திமுகவை யாராலும் அழிக்க முடியாது.. புது கட்சி அவ்வளவுதான்! விஜயை தாக்கி வடிவேலு பேச்சு? நெட்டிசன்கள் ட்ரோல் -
அதிமுகவை சமுதாய கட்சியாக மாற்றியவர் எடப்பாடி பழனிசாமி.. தென் மாவட்டங்களில் ஆட்டத்தை தொடங்கிய ஓபிஎஸ்!












Click it and Unblock the Notifications