மோசமாகும் நிலைமை.. டிராபிக் லைட்டே உருகிய கொடூரம்! பிரிட்டனை வாட்டி வதைக்கும் வெப்ப அலை!
லண்டன்: பிரிட்டனில் வரலாறு காணாத அளவில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. இத்துடன் வெப்ப அலையும் மக்களை வாட்டி எடுக்கத் தொடங்கியுள்ளது. பிரிட்டன் நாடு குளிர் பிரதேசமாகும். நிலநடுக்கோட்டிற்கு மேலே உள்ள இந்த நாடு ஆண்டில் பெரும்பாலான நாட்கள் குளிரில் நடுங்கிக்கொண்டிருக்கும். இந்நிலையில் தற்போது இந்த பகுதியில் சுமார் 40 டிகிரிக்கு மேல் வெப்பம் வாட்டியெடுக்க தொடங்கியுள்ளது.
இந்த வெப்பம் நமக்கு இயல்பானதாகவே தோன்றலாம். ஏனெனில் கோடைக்காலங்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இதை விட அதிக அளவு வெப்பம் பதிவாகும்.

பிரிட்டன்
ஆனால் பிரிட்டனுக்கு இது புதுசு. இந்த அதிக வெப்பம் அனல் காற்றை உருவாக்கியுள்ளது. இதனால் பல பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. மட்டுமல்லாது ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரயில் பாதையில் உள்ள லெவல் கிராசிங்கில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதீத வெப்பம் காரணமாக தண்டவாளங்கள் இளகியுள்ளன. லெவல் கிராசிங்கில் உள்ள சிக்னல் மேல் பொருத்தி வைக்கப்பட்டிருக்கும் லேசான பிளாஸ்டிக் உருகியுள்ளது. அப்படியெனில் வெப்பம் எந்த அளவு இருக்கும் என யோசித்து பாருங்கள்.

வெப்பம்
இந்த வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஏராளமான வீடியோக்கள் வெளிவந்துள்ளன. அதில் ஒரு குடிசை வீடு தீப்பிடித்து எரிகிறது. நெடுஞ்சாலையின் ஓரத்தில் உள்ள காடு தீப்பிடித்து எரிவதும் தெளிவாக தெரிகிறது. இதற்கிடையில் திரையரங்கு ஒன்றில் திடீரென தீப்பிடித்துள்ளது. ஆனால் அவசரக்கால அலாரம் வேலைசெய்யவில்லை. இதனால் தீயை அணைக்கும் பணியின்போது பொதுமக்களும் தண்ணீரில் நனைந்தனர்.

வெப்பமடைதல்
புவி வெப்பமடைதல்தான் இவ்வாறான நிகழ்வுகளுக்கு காரணம் என நடிகர் ஜார்ஜ் ஃபோராக்ரேஸ் ட்விட்டரில் தியேட்டரில் ஏற்பட்ட தீவிபத்தை வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். திரையரங்குகள் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்துகள் அந்நாட்டு தீயணைப்பு வீரர்களை தொடர்ந்து சோர்வுக்கு உள்ளாக்கியுள்ளது. செவ்வாய் கிழமையான நேற்று பல்வேறு பகுதிகளில் இதுவரை இல்லாத அளவு அதிக எண்ணிக்கையில் தீ விபத்துகள் ஏற்பட்டதாக தீயணைப்புத்துறை அறிவித்துள்ளது.

வெப்பநிலை
இதனால் மக்கள் அங்கு கடுமையாக அவதிப்பட்டுள்ளனர். அதேபோல வெப்பநிலையை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து பெற்றோர்களுக்கும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் வலியுறுத்தியுள்ளது. முன்னதாக பயணிகள் ரயில் நிலையங்கள் நீண்ட நேரமாக காத்து கிடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications