Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பள்ளிகளில் ஆடைக் கட்டுப்பாடு கட்டாயமாக்கப்பட வேண்டும்: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

பள்ளிகளில் ஆடைக் கட்டுப்பாடு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

லக்னௌ: நமது தனிப்பட்ட மத நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களை நாடு மற்றும் அதன் நிறுவனங்கள் மீது திணிக்க முடியாது என்று உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் கூறியுள்ளார். பள்ளிகளில் ஆடைக் கட்டுப்பாடு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த யோகி ஆதித்யாநாத், உத்தரபிரதேச மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக 300 இடங்களில் வெல்லும் என்று உறுதியாக கூறினார்.

தேசியவாதம், அனைத்துலக வளர்ச்சி மற்றும் ஏழைகளின் நலன் பற்றி பேசும் 'லோக் கல்யாண் சங்கல்ப் பத்ரா'வை பாஜக வெளியிட்டுள்ளது. இது முழு நேர்மையுடன் செயல்படுத்தப்படும். இந்திய அரசியலின் நிகழ்ச்சி நிரலை அவர் மாற்றி விட்டார் பிரதமர் மோடி மாற்றிவிட்டார் என்றும் யோகி ஆதித்யாநாத் கூறினார்.

Hijab Row: Dress code should be made compulsory in schools: UP Chief Minister Yogi Adityanath

கஜ்வா-இ-ஹிந்த் கனவு காண்பவர்களுக்கு இது பிரதமர் மோடியின் தலைமையில் புதிய இந்தியாவாகும். புதிய இந்தியா அனைவரின் வளர்ச்சிக்கானது, ஆனால் யாரையும் திருப்திப்படுத்துவது இல்லை. இது ஷரியாத் அல்ல, அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடக்கும் என்றும் யோகி ஆதித்யாநாத் தெரிவித்தார்.

சமாஜ்வாதி தலைவர் பதவிக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால்தான், அசம் கான் சிறையில் இருந்து வெளியே வருவதை அகிலேஷ் விரும்பவில்லை என்றும் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

முன்பு சாதி, மதம் மற்றும் குடும்பத்தைச் சுற்றியே அரசியல் இருந்தது. இன்று, வளர்ச்சி, நல்லாட்சி, கரிப் கல்யாண், கிராமங்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் நிகழ்ச்சி நிரலில் உள்ளனர் என்றும் யோகி ஆதித்யநாத் கூறினார். உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களை பாஜக விடுவிக்கிறது என்றும் கூறினார்.

இந்த அமைப்பு அரசியலமைப்புச் சட்டப்படி இயங்க வேண்டும். நமது தனிப்பட்ட மத நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களை நாடு மற்றும் அதன் நிறுவனங்கள் மீது திணிக்க முடியாது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து ஊழியர்களையும் 'பகவா' எனப்படும் காவி உடையை அணியச் சொல்லலாமா? என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர் பள்ளிகளில் ஆடைக் கட்டுப்பாடு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

நமது தனிப்பட்ட மத நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களை நாடு மற்றும் அதன் நிறுவனங்கள் மீது திணிக்க முடியாது என்று உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் கூறியுள்ளார். பள்ளிகளில் ஆடைக் கட்டுப்பாடு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் கேரளா, மேற்கு வங்கம் போல ஆகலாம் என்ற கருத்தை மீண்டும் உறுதியாக கூறினார். நான் எனது மாநில மக்களை எச்சரித்தேன் என்றும் கூறினார் யோகி ஆதித்யாநாத்.

காங்கிரஸ் கட்சியை அழிக்க உடன்பிறப்புகள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா போதும். அதற்கு வேறு யாரும் தேவையில்லை என்றும் யோகி ஆதித்யாநாத் கிண்டலடித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+