உ.பி இடைத்தேர்தல்: அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கோட்டையில் கொடி பறக்கவிட்ட பாஜக- குழிபறித்த மாயாவதி!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 2 லோக்சபா தொகுதி இடைத்தேர்தல்களில் ஆளும் பாஜக வெற்றி கொடி பறக்கவிட்டுள்ளது. பாஜக வென்ற 2 தொகுதிகளுமே சமாஜ்வாதி கட்சியின் கோட்டை என்பதால் இந்த வெற்றி மிக முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது.
உத்தரப்பிரதேசத்தின் ஆஸம்கர் தொகுதி எம்.பி.யாக இருந்தவர் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதாவ். இன்னொரு லோக்சபா தொகுதியான ராம்பூரில், அகிலேஷின் உறவினரும் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவருமான ஆஸம்கான் எம்.பி.யாக இருந்தார்.

2 தொகுதி இடைத்தேர்தல்
அகிலேஷ் யாதவும் ஆஸம்கானும் எம்.எல்.ஏக்களாக தேர்வானதால் எம்.பி. பதவிகளை இருவரும் ராஜினாமா செய்தனர். இதையடுத்து ஆஸம்கர், ராம்பூர் தொகுதிகளுக்கு கடந்த 23-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 2 தொகுதிகளையும் பாஜகவே கைப்பற்றி இருக்கிறது.

ஆஸம்கர் பாஜக வெற்றி
சமாஜ்வாதி கட்சியின் கோட்டையாக கருதப்பட்ட ஆஸம்கர், ராம்பூர்ர் இரு தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியிருப்பது சமாஜ்வாதி கட்சிக்கு பெரும் பின்னடைவாகும். 2019 லோக்சபா தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆஸம்கர் தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டியிட்டார். அப்போது அகிலேஷ் யாதவ் பெற்ற வாக்குகள் 6,21,578. உ.பி.யில் பாஜக அலை வீசிய போதும் யாதவ்கள், முஸ்லிம்கள், தலித்துகள் இணைந்து அகிலேஷ் யாதவுக்கு வாக்களித்ததால் அமோக வெற்றி கிடைத்தது.

வாக்கு பிரித்த மாயாவதி கட்சி
தற்போது நடைபெற்ற இடைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் பாஜக ஆகிய மூன்றுமே தனித்துப் போட்டியிட்டன. சமாஜ்வாதி கட்சியின் தர்மேந்தர் யாதவ், 3,03,837 வாக்குகள் பெற்றார். மாயாவதியின் பகுஜன் சமாஜ் வேட்பாளர் 2,66,106வாக்குகள் பெற்றிருந்தார். பாஜகவின் தினேஷ்லால் யாதவ் 3,12,432 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியை அறுவடை செய்தார். பகுஜன் சமாஜ் கட்சி வாக்குகளைப் பெற்றதால் பாஜக எளிதாக வெற்றியைப் பெற்றிருக்கிறது.

ராம்பூரிலும் பாஜக
இதேபோல்தான் முஸ்லிம்கள் அதிகமாக உள்ள ராம்பூர் தொகுதி இடைத்தேர்தலிலும் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்டத்தை காண்பித்துவிட்டது. பகுஜன் சமாஜ் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் தலித்துகள் வாக்குகள் கணிசமாக பாஜகவுக்கு சென்றது. பாஜகவின் கன்ஷியாம் சிங் லோதிக்கு 3,67,104 வாக்குகளும் சமாஜ்வாதி கட்சியின் அசிம் ராசாவுக்கு 3,25,056 வாக்குகளும் கிடைத்தன. பகுஜன் சமாஜ் கட்சி தமது ஆட்டத்தை 2 தொகுதிகளில் காட்டாமல் இருந்தால் சமாஜ்வாதி கட்சிக்கே வெற்றி கிடைத்திருக்கும்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications