திமுக-வை பின்பற்றும் பாஜக.. உ.பி.யில் பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! யோகி ஆதித்யநாத் அதிரடி!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் 6 கட்ட தேர்தல் இதுவரை நடந்து முடிந்திருக்கிறது.
7ம் கட்ட தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்தியாவே உற்று நோக்கும் தேர்தலின் கடைசி கட்ட பிரசாரங்கள் தீவிரமாகி வருகின்றது. 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. இந்த தேர்தலில் சமாஜ்வாதி, பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் பலத்த போட்டியில் நான்கு முனை போட்டி உருவாகியுள்ளது. பெரிய கூட்டணிகள் இல்லாமல், பெரிய கட்சிகள் எல்லாம் சிறிய கட்சிகளோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து வருகின்றன.

7ம் கட்ட தேர்தல்
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளில் இதுவரை 349 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்துள்ளது. விரைவில் நடைபெறும் 7வது கட்ட தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் 54 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் பாஜக வலுவாக இருக்கும் வாரணாசி மற்றும் அதன் பகுதிகளில் இந்த 7வது கட்டத்தில் தேர்தல் நடக்கிறது. இதற்காக பிரதமர் மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பாஜக
இந்த தேர்தலின் கடைசி பிரசாரம் என்பதால், அனைத்து கட்சிகளும் தங்கள் பிரசாரத்தை தீவிரபடுத்தி வருகின்றன. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம், சோன்பந்த்ரா பகுதியில் பேரணியில் கலந்துகொண்டார். அப்போது, ''உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மாநகர பேரூந்துகளில் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவச பயணம் செய்யலாம்.

இலவசம்
அதேபோல், விவசாயத்துக்கு இலவச தண்ணீர் விடப்படும். வருடத்துக்கு இரண்டு முறை இலவச சிலிண்டர் கொடுக்கப்படும் என்றார். உபி பிரசாரத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், ''நான் இந்த மாநிலத்தின் முதல்வராக இருந்திருக்கிறேன். ஆனால் என்னைவிட சிறந்த முதல்வராக யோகி ஆதித்யநாத் செயல்பட்டிருக்கிறார்'' என்றார்.












Click it and Unblock the Notifications