அனல் பறக்கும் அரசியல்.. ஆட்சி கனவில் கட்சிகள்.. உ.பி.யில் நாளையுடன் ஓய்கிறது முதல்கட்ட பிரச்சாரம்
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான பரப்புரை நாளை மாலையுடன் முடிவடைகிறது.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளன. இதற்கான வேலைகளை அனைத்து மாநில கட்சிகளும் துரிதமாக செயல்படுத்தி வருகின்றன.
உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்குமான சட்டசபைத் தேர்தல் வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக, சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. உத்தரப்பிரதேசத்தில் கடந்த முறை ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி கட்சிக்கும் தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக-வுக்கும் தான் நேரடி போட்டி நிலவுகிறது. கருத்துக்கணிப்புகள் பாஜக தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளன. இதனால் பாஜக இன்னும் துரிதமாக பிரசாரத்தை முன்னெடுத்துள்ளன.

முதல் கட்ட தேர்தல்
உத்தரப்பிரதேசத்தில் முதல்கட்டமாக 58 தொகுதிகளில் தேர்தல், வரும் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இங்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள். இந்த முதற்கட்ட தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் 11 மாவட்டங்களில் தேர்தல் நடக்கிறது. இந்த 58 தொகுதிகளில் மொத்தம் 615 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

தேர்தல்
இந்தியாவே எதிர்நோக்கி இருக்கும் உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தல் முதற்கட்ட வாக்குப் பதிவுக்கு இன்னும் மூன்று தினங்களே உள்ளன. சட்டசபைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான பரப்புரை நாளை மாலையுடன் முடிவடைகிறது. இதையடுத்து அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதையடுத்து, வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரசாரம்
ஆட்சியில் இருக்கும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர ஸ்டார் பேச்சாளர்களைக் களமிறக்கியுள்ளது. பிரதமர் மோடி டிஜிட்டல் பிரசாரத்தை மேற்கொண்டிருக்கிறார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாவட்டம் மாவட்டமாக சென்று பிரசாரம் செய்கிறார். முதல்வர் யோகி ஆதித்யநாத் மனுத்தாக்கல் செய்தபோது உடனிருந்தார். அதேபோல், சமாஜ்வாதி கட்சியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் ப்ரியங்கா காந்தி மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். நாளை மாலையுடன் பிரசாரம் முடியவுள்ள நிலையில், உத்தரப்பிரதேசத்தில் அனல் பறக்கும் பிரசாரங்கள் நடந்து வருகின்றன.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications