லக்கிம்பூர் விவசாயிகள் கொலை.. சிறையிலிருந்து ஜாமினில் விடுதலையான மத்திய அமைச்சர் மகன்
லக்னோ: லக்கிம்பூர் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த மத்திய இணை அமைச்சர் மகன் இன்று சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூரில் விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்ததாக, மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆஷிஷ் மிஸ்ராவுவின் ஜாமின் மனுவை விசாரித்த் அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளை கடந்த சில தினங்களுக்கு முன் அவருக்கு ஜாமின் வழங்கியது. இந்நிலையில், ஜாமின் பெற்று இன்று சிறையில் இருந்து வெளியே வந்தார் ஆஷி மிஸ்ரா.

விவசாய சட்டம்
விவசாய சட்டங்களை ரத்து செய்யச் சொல்லி நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். பஞ்சாப் விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்தினர். ஓராண்டு காலத்துக்கும் மேல் விவசாய போராட்டம் நடந்தது. இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் விவசாய சட்டங்களை ரத்து செய்து உத்தரவிட்டது மத்திய அரசு.

லக்கிம்பூர்
உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அமைச்சருக்குச் சொந்தமான கார் மோதி 4 விவசாயிகள் உட்பட பலர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை செய்தது மத்திய இணை அமைச்சரின் மகன் என தெரியவந்தது. பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு, மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜாமின்
ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமீன் மனு, லக்கிம்பூர் கெரியின் கீழ் மற்றும் அமர்வு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. கடந்த மாதம், இந்த மனுவை விசாரித்த லக்னோ கிளை உயர்நீதிமன்றம் தனது உத்தரவை ஒத்திவைத்தது. இந்நிலையில், கடந்த 10ம் தேதி ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது அலகாபாத் நீதிமன்றம்.

விடுதலை
லக்கிம்பூர் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த மத்திய இணை அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கப்பட்டதும், இன்று சிறையில் இருந்து விடுதலையானார். லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்திய உத்தரப்பிரதேச காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு விவசாயிகள் மற்றும் பத்திரிகையாளர் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட 13 பேரை கைது செய்தது.

தேர்தல்
உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தல் நடந்து வரும் நிலையில், விவசாயிகள் மீது கார் ஏற்றி கொன்றதாக சொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக பிரமுகரின் மகன் விடுதலை ஆகியிருப்பது உத்தரப்பிரதேசத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் கிடைத்ததற்கு,
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications