Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Exclusive: அதிமுகவில் சசிகலா..? ஓபிஎஸ் நிலைப்பாட்டிற்கு செல்லூர் ராஜூ ஆதரவு..!

Subscribe to Oneindia Tamil

மதுரை: சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பது குறித்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பி.எஸ். பொறுப்புடன் பதில் அளித்திருப்பதாக கூறுகிறார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.

ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என பேசுபவரல்ல என செல்லூர் ராஜூ ஒன் இந்தியா தமிழிடம் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக நம்மிடம் மனம் திறந்து அவர் பேசியதன் விவரம் பின்வருமாறு;

பொறுப்புடன் பதில்

பொறுப்புடன் பதில்

''அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் சசிகலா குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு ஓ.பி.எஸ். பொறுப்புடன் பதில் அளித்தார். சசிகலாவை சேர்ப்பது குறித்து கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள் என்று கூறியதில் தவறேதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஒரு கட்சிக்கு தலைவராக விளங்கக்கூடியவர் இப்படித்தானே பதில் சொல்ல வேண்டும், நீங்களே சொல்லுங்கள், எடுத்தேன் கவிழ்த்தேன் என பேசினால் அது சரியாக இருக்குமா.''

 ஆயிரம் பேர்

ஆயிரம் பேர்

''ஓ.பி.எஸ்.சை பொறுத்தவரை எடுத்தேன் கவிழ்த்தேன் என பேசமாட்டார். ஜெயக்குமார் பேட்டி குறித்து எனக்குத் தெரியாது, நான் பார்க்காததால் அது குறித்து பேச விரும்பவில்லை. அதிமுக ஜனநாயக இயக்கம், ஆயிரம் பேர் ஆயிரம் சொல்வார்கள். சசிகலா அரசியல் செய்ய விரும்புகிறார், அது அவரது விருப்பம். அதனால் அவரது சுற்றுப்பயணம் குறித்து நான் எப்படி கருத்துச் சொல்ல முடியும். ஜனநாயக நாட்டில் தம்பி நீங்க நினைத்தால் கூட ஒரு அரசியல் கட்சியை தொடங்கலாம். இதனால் இதற்கெல்லாம் கருத்துக் கூறுவது முறையாக இருக்காது.''

தலைமை பண்பு

தலைமை பண்பு

''ஓ.பன்னீர்செல்வம் ஒரு தலைவருக்குரிய பண்புடன் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார். இதனால் யாருக்கு என்ன வந்துவிட்டது'' என ஒ.பி.எஸ்.ஸை விட்டுக் கொடுக்காமலேயே முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். இதனிடையே, கே.பி.முனுசாமி குறித்த கேள்விக்கு செல்லூர் ராஜூ பதிலளிக்க மறுத்துவிட்டார். சசிகலா விவகாரத்தை மையமாக வைத்து அதிமுக மேல்மட்ட நிர்வாகிகளின் மாறுபட்ட கருத்துக்களால் அக்கட்சியின் தொண்டர்கள் சோர்வும், குழப்பமும் அடைந்துள்ளனர்.

கட்சியில் பூகம்பம்

கட்சியில் பூகம்பம்

இதனிடையே சில நாட்களுக்கு முன்னர் தலைமையை நம்பி அதிமுக இல்லை, தொண்டர்களை நம்பித் தான் அதிமுக என்றும் கட்சியில் மாற்றம் அவசியம் எனவும் கூறி புயலை கிளப்பியிருந்தார் செல்லூர் ராஜூ என்பது கவனிக்கத்தக்கது. மொத்தத்தில் அதிமுகவில் பூகம்பம் வெடித்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+