வைகையிலிருந்து தண்ணீர் திறங்கள்.. மதுரையில் 4 மாவட்ட விவசாயிகள் மறியல்
மதுரை: வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு மதுரை- வீரகனூர் சாலையில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
மதுரை மாவட்டம் முள்ளிப்பள்ளம் பகுதியிலிருந்து 60 கிமீ பயணிக்கும் கிருதுமால் நதியின் மூலமாக மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்ட விவசாயிகள் பயன்பெறுகின்றனர். கடந்த 60 ஆண்டுகளாக கிருதுமால் நதி வாய்க்காலில் பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பதில்லை.

பொதுப் பணித் துறை
இதுகுறித்து நான்கு மாவட்டங்களின் ஆட்சியர்களிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. வைகை அணையில் இருந்து பாசனம் பெறும் அனைத்துப் பகுதிகளுக்கும் தண்ணீர் திறக்கப்படும் நிலையில், கிருதுமால் நதி பாசனத்துக்கு மட்டும் தண்ணீர் திறக்க பொதுப்பணித் துறையினர் மறுத்து வருகின்றனர்.

பாசனத்துக்கு அவதி
இதனால் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கரில் பாசனத்துக்கு தண்ணீரில் இல்லாமல் பயிர்கள் வீணாகியுள்ளன. மேலும் குடிநீரின்றி பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

மறியல் போராட்டம்
இதையடுத்து வைகையிலிருந்து கிருதுமால் நதிக்கு தண்ணீர் திறக்கக் கோரி மேற்கண்ட 4 மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் மதுரை- வீரகனூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போக்குவரத்து பாதிப்பு
4 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சீமான் வருகை
ஆயிரக்கணக்கான விவசாயிகள் சேர்ந்து நடத்தும் இந்தப் போராட்டத்தால் மதுரை - ராமேஸ்வரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் தலைவர் சீமான் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் வரவுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications