மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை.. பிப்ரவரி 28ல் திறந்து வைக்கும் பிரதமர் மோடி.. ஒரு வழியாக பணிகள் நிறைவு?
மதுரை: பிப்ரவரி 28ஆம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மார்ச் மாதம் முதல் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்காள் இந்த வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதன் கட்டுமான பணிகள் சுமார் 5 ஆண்டுகளுக்கு பின், 2024ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த 5 ஆண்டுகளில் எதிர்க்கட்சிகள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் செங்கலை வைத்து மிகப்பெரிய பிரச்சாரத்தையும், போராட்டத்தையும் மேற்கொண்டனர்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையுடன் மற்ற மாநிலங்களில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் எல்லாம் திறப்பு விழா காணப்பட்டது. ஆனால் சுமார் 8 ஆண்டுகளுக்கு பின்னரும் கூட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திறந்து வைக்கப்படவில்லை. இதனிடையே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா மதுரை வந்திருந்தார்.
எய்ம்ஸ் 3டி மாடல்
அப்போது ஸ்டாலின் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிலை குறித்து கேள்வி எழுப்பினார். அதன்பின் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் 3டி மாடல் வீடியோ வெளியிடப்பட்டது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மொத்தம் 2 லட்சத்து 31 ஆயிரத்து 782 சதுர அடி பரப்பளவில், ரூ.2,021 கோடி மதிப்பீட்டில் இந்த மருத்துவமனை கட்டப்படுகிறது.
முதற்கட்ட எய்ம்ஸ் வளாகம்
முதற்கட்டமாக 1.05 லட்சம் சதுர அடி பரப்பளவில் மருத்துவக் கல்லூரி கட்டிடம், நர்சிங் கல்வி வளாகம், நிர்வாக மற்றும் ஆடிட்டோரியம் கட்டிடங்கள், பிரதான மருத்துவமனை, புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட மொத்தம் 13 கட்டிடங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான பணிகளை மருத்துவமனை நிர்வாகம் விரைவுபடுத்தி வருகிறது.
2ஆம் கட்டத்தில் என்ன?
இரண்டாம் கட்டத்தில் ஆடிட்டோரியம், குடியிருப்பு வளாகங்கள், இயக்குநர் பங்களா, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ஆயுஷ் மருத்துவ பிரிவு உள்ளிட்ட 16 கட்டிடங்கள் கட்டப்படவுள்ளதாக மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மொத்தமாக 29 கட்டிடங்கள் உருவாக்கப்பட உள்ளன. தற்போது முதற்கட்ட கட்டுமான பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.
பிப்ரவரி 28ல் திறப்பு?
பெயிண்டிங் பணிகள் மட்டுமே மீதமிருக்கும் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 28ஆம் தேதி திறக்க வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் நடக்கும் என்டிஏ பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் வரும் மோடி, இதனை திறந்து வைக்க இருக்கிறார். மார்ச் மாதத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இந்த வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவசரம் காட்டுவது ஏன்?
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் என்று பார்க்கப்பட்டது. இதனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரின் விமர்சனத்தை கட்டுப்படுத்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
-
மேயர் பிரியாவுடன் Pose! இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி! சத்யராஜ் மகள் பதிவு! என்னவா இருக்கும்? -
அதிமுக மாஜிகளுக்கு கட் அவுட்..திமுக உ.பி.களுக்கு கெட் அவுட்டா? 19 சீட்டுகளை அள்ளிய ’அம்மா’ பிள்ளைகள் -
வேட்பாளரை மாற்றுங்க.. அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட்ட.. தாம்பரம் எம்எல்ஏ SR ராஜா ஆதரவாளர்கள் -
ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு ரெடி.. “குறுக்க யாரும் வந்துடாதீங்க”.. அறிவிப்பில் வந்த எச்சரிக்கை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியானது.. சின்னதுரைக்கு மீண்டும் வாய்ப்பு! -
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
ரூ.2000 + ரூ.8000.. இல்லத்தரசிகளின் மனதை வெல்லும் திமுக மாஸ்டர் பிளான்.. கூப்பன் தருவது ஏன்? -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
DMK Manifesto: முதியோர் உதவித்தொகை இனி ரூ. 2 ஆயிரமாக உயர்வு.. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு -
முட்டி மோதியும் கண்டுகொள்ளாத திமுக, அதிமுக.. 4 தொகுதிகளில் மன்சூர் அலிகான் தனித்துப் போட்டி!












Click it and Unblock the Notifications