UPSC தேர்வில் தேசிய அளவில் 2ம் இடம்! மொத்த நாட்டையும் திரும்பி பார்க்க வைத்த ராஜேஸ்வரி! யார் இவர்?
மதுரை: UPSC தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் முதல் 5 இடங்களில் ஒரேயொரு பெண் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கிறார். மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த, ராஜேஸ்வரி என்பவர் அகில இந்திய அளவில் 2ம் இடம் பிடித்து தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
ராஜேஸ்வரியின் சொந்த ஊர் மதுரை. இவர் 2018-ல் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மின்சாரப் பொறியியல் முடித்தார். சமூகவியல் இவரது விருப்பப் பாடமாகும். இவரது தாய் ஒரு இணைப் பேராசிரியர், தந்தை இருசக்கர வாகன உதிரிபாகக் கடை வைத்திருப்பவர் மற்றும் காப்பீட்டு ஆலோசகராகவும் உள்ளார்.

இவர் ஏற்கனவே TNPSC குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று, தற்போது துணை ஆட்சியராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் யுபிஎஸ்சி தேர்வு பயிற்சியின்போது, மாதிரி நேர்காணலில் இவர் அளித்திருந்த பதில்கள் கவனம் பெற்றிருந்தன. இதனை டைம்ஸ் நவ் செய்தி ஊடகம் தற்போது வெளியிட்டிருக்கிறது. இந்த மாதிரி நேர்காணலில், திருப்பரங்குன்றம் தீப விஷயம் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
கேள்வி: மதுரையில் ஒரு மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான ஒரு சர்ச்சை பற்றி செய்தித்தாள்களில் படித்தேன். அந்த சர்ச்சை என்ன?
ராஜேஸ்வரி: திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் தீபம் ஏற்றும்போது விளக்கு ஏற்றுவது குறித்த சர்ச்சை அது. சமீபத்தில், அந்தச் சொத்து கோவிலுக்குச் சொந்தமானது என்பதால், இந்து அமைப்புகள் விளக்கு ஏற்ற நீதிமன்றம் அனுமதி அளித்தது.
கேள்வி: ஆட்சேபனை என்ன? ஏன் நிறுத்தப்பட்டது?
ராஜேஸ்வரி: மாவட்ட நீதிபதி சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் சமூக நல்லிணக்கம் குறித்த கவலைகளைக் காரணம் காட்டி அதைத் தடுத்தார்.
கேள்வி: நீங்கள் அங்கு மாவட்ட ஆட்சியராக இருந்து இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். மக்கள் உத்தரவைப் பின்பற்றவில்லை. அவர்கள் விளக்கு ஏற்றச் செல்லும்போது, மற்றொரு சமூகம் கூடி கற்களை வீசத் தொடங்குகிறது. நீங்கள் சம்பவ இடத்திலேயே இருக்கிறீர்கள். என்ன செய்வீர்கள்?
ராஜேஸ்வரி: நான் உடனடியாக காவல் கண்காணிப்பாளர் மற்றும் கோயில் அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பேன். அமைதிப் பேச்சுவார்த்தைக்காகக் குழுத் தலைவர்களை அழைத்து, சமூக மோதலை உடனடியாகத் தணிக்கும் முயற்சியில் ஈடுபடுவேன்.
கேள்வி: அவர்கள் செவிசாய்க்காவிட்டால்?
ராஜேஸ்வரி: நான் பெரும் வன்முறை இல்லாமல் காவல்துறைப் படைகளைப் பயன்படுத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்பேன்.
கேள்வி: அவர்கள் பேருந்துகளை எரிக்கவும், சொத்துகளைச் சேதப்படுத்தவும் தொடங்கினால்?
ராஜேஸ்வரி: அப்படியானால், இதில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து, கூட்டத்தைக் கலைத்து, சட்டம் ஒழுங்கை மீட்டெடுப்பதன் மூலம் அடுத்த கட்ட நடவடிக்கைக்குச் செல்வோம் என்று பதிலளித்திருந்தார்.
ராஜேஸ்வரி, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வந்திருக்கிறார். தற்போது தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications