ரிசர்வ் வங்கி இயக்குநர் குழு கூட்டம்.. விதிமுறையை தளர்த்த, குருமூர்த்தியை நம்பும் மத்திய அரசு!
Recommended Video

மும்பை: ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல், மற்றும் மத்திய அரசு நடுவே மோதல் போக்கு உள்ள நிலையில், மத்திய அரசின் வாதங்களை முன் வைத்து, ரிசர்வ் வங்கியை வளைந்து கொடுக்கச் செய்யும் முயற்சியில், பகுதி நேர இயக்குநர் குருமூர்த்தி ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பையிலுள்ள ரிசர்வ் வங்கி தலைமையகத்தில், அதன் ஆளுநர் உர்ஜித் பட்டேல் தலைமையில் இயக்குநர்கள் குழு கூட்டம் இன்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில், மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் நடுவேயான மோதல் போக்கை முடிவுக்கு கொண்டுவர தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கியின் பகுதி நேர இயக்குனர்களாக, ஆடிட்டரும், துக்ளக் ஆசிரியருமான குருமூர்த்தி மற்றும் சதிஷ் மராதே ஆகிய பாஜக ஆதரவாளர்கள் ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டனர். இன்றைய ரிசர்வ் வங்கி இயக்குனர் குழு கூட்டத்தில், இவர்கள், மத்திய அரசின் சார்பில் லாபி செய்து வாதம் முன் வைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ரிசர்வ் வங்கி 9 சதவீத மூலதன ஆதாய விகிதத்தை கடை பிடிக்கிறது. சர்வதேச வங்கிகள் 8 சதவீத மூலதன ஆதாய விகிதத்தைதான் கடை பிடிக்கின்றன. எனவே, மூலதன ஆதாய விகிதம் தொடர்பான விதிகளை தளர்த்த வேண்டும் என்று மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது.
பாஜகவின் வாக்கு வங்கி சிறு, குறு தொழிலதிபர்கள் என்பதால், வங்கிகளில் எளிதாக தொழில் கடன் கிடைப்பதை உறுதி செய்வதே வரும் தேர்தலில் தங்கள் வெற்றிக்கு உதவும் என்று நினைக்கிறது. எனவே ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை தளர்த்த மத்திய அரசு நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. இதற்கு குருமூர்த்தி உள்ளிட்டோர் உதவி செய்வார்கள் என்று தெரிகிறது.
இன்றைய ஆலோசனை கூட்டத்தின் முடிவில் என்ன மாதிரி முடிவுகள் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பங்குச்சந்தை மற்றும் தொழில்முனைவோர், தொழிலதிபர்கள் மத்தியில் உள்ளது. ரிசர்வ் வங்கி கூட்டத்தின் இறுதியில் எடுக்கப்படும் முடிவுகள் மார்க்கெட்டில் எதிரொலிக்க காத்துக்கொண்டுள்ளன.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications